NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை
    பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தில் சில திருத்தங்களை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை

    எழுதியவர் Srinath r
    Nov 13, 2023
    04:56 pm

    செய்தி முன்னோட்டம்

    பொருளாதார குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது எனவும், அவர்களை கொலை, கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்கள் செய்தவர்களுடன் இணைக்க கூடாது எனவும் பாராளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

    பாஜக எம்பி பிரிஜ்லால் தலைமையிலான உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டத்தில் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

    பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்-2023) மசோதா, பாரதீய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்-2023) மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம் (பிஎஸ்ஏ-2023) மசோதாக்களுடன் ஆகஸ்ட் 11 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மசோதாக்கள் மூன்றும் முறையே, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898, இந்திய தண்டனைச் சட்டம், 1860, மற்றும் இந்திய சாட்சியச் சட்டம், 1872, ஆகியவற்றுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது.

    2nd card

    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தப்பட கூடாது

    பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 43(3) பிரிவின்படி கை விலங்குகளை பயன்படுத்துவது, சரியான முறையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி கை விலங்குகளை கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்கவும், கைதின்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    இருப்பினும், பொருளாதார குற்றங்கள் சிறியது முதல் தீவிரமானது வரை மாறுபடலாம் என்பதால், பொருளாதார குற்றவாளிகளை இதில் சேர்க்க கூடாது என பாராளுமன்ற நிலைக்குழு கருதுகிறது.

    மேலும், பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 43(3) பிரிவில் திருத்தம் மேற்கொண்டு, 'பொருளாதார குற்றங்களை' நீக்க பாராளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

    3rd car

    போலீஸ் காவல் குறித்து நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள்

    காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள 15 நாள் போலீஸ் காவலை, காவல்துறையினர் முழுமையாகவோ, பாதியாகவோ, 60 முதல் 90 நாட்கள் வரையிலான தடுப்பு காலம்(டிட்டன்ஷன் பீரியட்) காலத்தில், 40 முதல் 60 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் பிரிவு 187(2) கூறுகிறது.

    இது சில அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தப்படும் என்பதால், இந்த பிரிவில் திருத்தம் மேற்கொண்டு தெளிவுபடுத்த பாராளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

    மேலும், பிஎன்எஸ்எஸ் 482 பிரிவில், "குற்றவாளி 15 நாட்களுக்கு பின்னும் போலீஸ் காவலுக்கு அனுப்பப்படலாம்" என சேர்க்க அக்குழு குறிப்பிட்டுள்ளது.

    தற்போதுள்ள குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி, குற்றவாளி கைது செய்யப்பட்டது முதல் வரை 15 நாட்களுக்குள், அதிகபட்சமாக 15 நாட்கள் வரை போலீஸ் காவல் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    கொலை
    பாலியல் வன்கொடுமை
    பாஜக

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    நாடாளுமன்றம்

    பாகிஸ்தான் பிரதமரின் கோரிக்கையின் பேரில் அந்நாட்டு நாடளுமன்றம் இரவோடு இரவாகக் கலைப்பு பாகிஸ்தான்
    நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    சிறு குற்றங்களுக்கு தண்டனையாக சமூக சேவை; நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் மத்திய அரசு
    சட்டமாகியது டெல்லி அவசர சட்ட மசோதா: ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர் டெல்லி

    கொலை

    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  பலாத்காரம்
    தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்  உத்தரப்பிரதேசம்
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கைது
    கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம்  கேரளா

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்

    பாஜக

    பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து அதிமுக விலகல்: பின்னணி என்ன? பாஜக அண்ணாமலை
    அதிமுக - பாஜக கூட்டணி பிளவையடுத்து, இணையத்தில் ட்ரெண்டாகும் '#நன்றி_மீண்டும்வராதீர்கள்' வைரல் செய்தி
    கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக - பாஜகவுடன் இணையும் ஓபிஎஸ், டிடிவி ? அண்ணாமலை
    கூட்டணி முறிவு: டெல்லியில் பாஜக தலைவர்களை சந்திக்கும் அண்ணாமலை  அண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025