NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொடைக்கானலில் இனி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பயன்படுத்தினால் ரூ.20 பசுமை வரி; திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அதிரடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொடைக்கானலில் இனி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பயன்படுத்தினால் ரூ.20 பசுமை வரி; திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அதிரடி
    கொடைக்கானலில் இனி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பயன்படுத்தினால் ரூ.20 பசுமை வரி

    கொடைக்கானலில் இனி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பயன்படுத்தினால் ரூ.20 பசுமை வரி; திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அதிரடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 22, 2024
    05:08 pm

    செய்தி முன்னோட்டம்

    திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தியுள்ள பசுமை வரி விதிப்பின் ஒரு பகுதியாக, கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்தால், ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வரி விதிப்பின்படி, சுற்றுலாப் பயணிகள், குடியிருப்பாளர்கள், வணிகர்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்திருக்கும் அல்லது விற்கும் தனியார் நபர்களுக்கு மாவட்ட அதிகாரிகளால் 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கொடைக்கானலை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் வகையில், 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் மற்றும் குளிர்பானங்களுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    குழுக்கள்

    திட்டத்தை செயல்படுத்த பல்வேறு மட்டங்களில் குழுக்கள்

    இந்த நடைமுறையை கடுமையாக அமல்படுத்த மாவட்ட, மண்டல மற்றும் பஞ்சாயத்து மட்டங்களில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

    குழுக்கள் ஒவ்வொரு வாரமும் அல்லது மாதமும் கடைகள், உணவகங்கள் மற்றும் பிற இடங்களை ஆய்வு செய்யும். பறிமுதல் செய்யப்படும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டிலுக்கும் திடீர் சோதனை நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

    மேலும், கொடைக்கானலில் நுழையும் இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்.

    இந்த முயற்சிக்கு காவல் துறை, வனத்துறை மற்றும் கொடைக்கானல் உள்ளாட்சி அமைப்புகள் ஆதரவு அளிக்கும்.

    ஜூன் 28, 2024 தேதியிட்ட உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 15 கிராம பஞ்சாயத்துகள், கிராம சபைக் கூட்டத்தில், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பசுமை வரியாக ரூ.20 வசூலிக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொடைக்கானல்
    திண்டுக்கல்
    மாவட்ட செய்திகள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கொடைக்கானல்

    புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம்  தமிழ்நாடு
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை சுற்றுலாத்துறை
    கொடைக்கானலில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த காங்கிரஸ் பிரமுகர் கைது  காங்கிரஸ்
    மலை சாலைகளில் அடிப்படை வசதிகளை செய்துதர சுற்றுலா பயணிகள் கோரிக்கை  தமிழ்நாடு

    திண்டுக்கல்

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் தமிழ்நாடு
    ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி காவல்துறை
    தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ தமிழக அரசு

    மாவட்ட செய்திகள்

    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு தமிழ்நாடு
    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி கோவை
    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் தமிழ்நாடு
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோவில்கள்

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை
    3 நிறுவனங்கள், ரூ.850 கோடி முதலீட்டிற்கான MOUகள்: முதலமைச்சர் ஸ்டாலினின் சிகாகோ பயண ஹைலைட்ஸ் முதலீடு
    ஆன்லைன் முன்பதிவில் புதிய சாதனை படைத்த SETC: ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேலானோர் முன்பதிவு போக்குவரத்து
    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள் விநாயகர் சதுர்த்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025