NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம்
    முதல்வர், ஆளுநர் ஆகிய இரு தரப்பினரும் சுய மதிப்பீடு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்

    'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 07, 2023
    12:24 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டசபைகளால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாக்கள் மீதான நடவடிக்கையை ஆளுநர்கள் தாமதப்படுத்துவதாக பல மாநிலங்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஆளுநருக்கு எதிரான பஞ்சாப் அரசின் மனுவை நேற்று விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த கருத்துக்களை கூறியுள்ளது.

    மேலும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பதிவு செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும் மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநர்கள் தாமதம் செய்வதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

    பிருஹவெட்ஜ்

    'ஆளுநர் ஒருமுறை மட்டுமே மசோதாக்களை நிறுத்திவைக்க முடியும்': உச்ச நீதிமன்றம் 

    வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன் ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    இந்த விவகாரங்கள் உச்சநீதிமன்றத்திற்கு வருவதற்கு முன் ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி சந்திரசூட், ஆனால் அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் ஜூன் மாதத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்டிப்பாக பஞ்சாப் சட்டசபை கூட்டத்தை மீண்டும் கூட்டியதற்காக மாநில அரசை விமர்சித்தார்.

    "முதல்வர், ஆளுநர் ஆகிய இரு தரப்பினரும் சுய மதிப்பீடு செய்ய வேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை மறந்துவிடக்கூடாது. ஆளுநர் ஒருமுறை மட்டுமே மசோதாக்களுக்கான ஒப்புதலை நிறுத்திவைத்து திருப்பி அனுப்ப முடியும்." என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    தமிழகம்
    கேரளா
    கவர்னர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உச்ச நீதிமன்றம்

    இபிஎஸ்'க்கு எதிரான முறைகேடு வழக்கு - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு எடப்பாடி கே பழனிசாமி
    தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா: அரசியல் சாசன அமர்வை கூட்டுகிறது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - மத்திய அரசு  மத்திய அரசு
    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    தமிழகம்

    அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    தமிழகத்தின் கட்டடக்கலை மற்றும் உணவை பற்றி இயக்குனர் ராஜமௌலி புகழாரம்  ராஜமௌலி
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  வானிலை எச்சரிக்கை
    தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை துவங்க நடிகர் விஜய் முடிவு  நடிகர் விஜய்

    கேரளா

    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஓணம்
    ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு தமிழ்நாடு
    'INDIA' Vs பாஜக: 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  இந்தியா
    இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் - கேரளாவில் திறப்பு சுற்றுலா

    கவர்னர்

    சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு தமிழ்நாடு
    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர் தமிழ்நாடு
    புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேரம் குறைப்பு  புதுச்சேரி
    தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025