Page Loader
பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?
நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க ஆளும் கட்சி மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

பாஜக அரசை கலைக்க முயற்சி: நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்போது நடைபெறும்?

எழுதியவர் Sindhuja SM
Jul 26, 2023
03:06 pm

செய்தி முன்னோட்டம்

INDIA கூட்டணி(காங்கிரஸ், திமுக உட்பட) கட்சிகளும், தெலுங்கானாவின் BRS கட்சியும், மக்களவையில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக இரண்டு தனித்தனி நம்பிக்கையில்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளன. அரசாங்கத்திற்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இதற்கான விவாத தேதியை சபாநாயகர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூரில் 2 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை கலவரங்களால் இதுவரை குறைந்தது 160-பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அங்கு நடந்துவரும் கலவரங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கிடையில், மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை-19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிஜில் 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கவிழ்க்கப்படுமா?

இதனை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பதவி விலக வேண்டி இருக்கும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க ஆளும் கட்சி மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால், ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்தால் உடனடியாக ஆட்சி கவிழும். பாஜக அரசு மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 272 எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தற்போது, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி(NDA) கட்சிகளை சேர்ந்த 331 உறுப்பினர்கள் மக்களவையில் உள்ளனர். இதில் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் மட்டும் 303 பேர் ஆவர். அதனால், பாஜக ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.