NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
    இந்தியா

    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

    எழுதியவர் Sindhuja SM
    May 10, 2023 | 02:05 pm 1 நிமிட வாசிப்பு
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
    இடைக்கால தீர்மான நிபுணராக(IRP) அப்லியாஷ் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்(NCLT) இன்று(மே 10), 'கோ ஃபர்ஸ்ட்' விமான நிறுவனத்தின் திவால் மனுவை ஏற்றுக்கொண்டது. 'கோ ஃபர்ஸ்ட்' விமான சேவை நிறுவனம், சென்ற வாரம் திடீரென்று சேவைகளை தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக அறிவித்தது. மேலும், தங்கள் நிறுவனத்தை திவாலானதாக அறிக்க வேண்டும் என்று கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமலிங்கம் சுதாகர் மற்றும் எல்.என்.குப்தா ஆகியோர் அடங்கிய இரு உறுப்பினர் பெஞ்ச், 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தின் திவால் மனுவை ஏற்றுக்கொண்டது. கடனில் சிக்கியுள்ள 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனத்தை நடத்துவதற்கு, இடைக்கால தீர்மான நிபுணராக(IRP) அப்லியாஷ் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் ரூ.5 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் 

    திவாலானதை அடுத்து, பணிநீக்கங்கள் எதுவும் செய்யக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், உடனடி செலவுக்காக ரூ.5 கோடி டெபாசிட் செய்யுமாறு நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் உறுதிசெய்ய IRP உடன் ஒத்துழைக்குமாறு நிறுவனத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, கடந்த மே 3ஆம் தேதி முதல் தனது விமான சேவைகளை நிறுத்தியது. கோ ஃபர்ஸ்ட் ஏற்கனவே மே-15 வரை டிக்கெட் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது. பிராட் & விட்னி(P&W) உற்பத்தி நிறுவனம் இன்ஜின்களை வழங்காததால் தான் தங்களது நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் முன்பு குற்றம்சாட்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    விமானம்
    விமான சேவைகள்

    இந்தியா

    வெளிநாடுகளுக்கு சென்ற குடும்பங்கள் - ஆளில்லாமல் காலியாக கிடக்கும் விலையுர்ந்த பங்களாக்கள் கேரளா
    'மோக்கா' புயல் இன்று மாலை உருவாகும்: வானிலை எச்சரிக்கை  வானிலை அறிக்கை
    இந்தியாவில் ஒரே நாளில் 2,109 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு கொரோனா
    ஆதார் எண்ணை வைத்து நம் வங்கிக்கணக்கை ஹேக் செய்ய முடியுமா? ஆதார் புதுப்பிப்பு

    விமானம்

    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்: DGCA நோட்டீஸ்  இந்தியா
    இந்திய வான்வெளிக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தால் பரபரப்பு இந்தியா
    ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்: 3 பேர் பலி  இந்தியா
    மே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது இந்தியா

    விமான சேவைகள்

    ஏர் இந்தியா ஆட்சேர்ப்பு - 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் குவிந்துள்ளதாக மகிழ்ச்சி!  ஏர் இந்தியா
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு  இந்தியா
    3 நாட்கள் விமான சேவையை ரத்து செய்த கோ பர்ஸ்ட் - காரணம் என்ன?  விமானம்
    நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்' இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023