NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது
    கோ ஃபர்ஸ்ட் டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் வரை நிறுத்தப்பட்டது

    மே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது

    எழுதியவர் Sindhuja SM
    May 04, 2023
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    மே 15 ஆம் தேதி வரை டிக்கெட் விற்பனையை நிறுத்த இருப்பதாக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம்(DGCA) தெரிவித்துள்ளது.

    இந்த தகவலை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

    இந்த வாரம் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கேட்டு கொண்டதை அடுத்து, மே 15 வரை பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து டிக்கெட்டுகளுக்கும் "ரீஃபண்ட்" வழங்கப்படும் என்று கோ ஃபர்ஸ்ட் அறிவித்துள்ளது.

    முன்னதாக 'கோ ஏர்' என அழைக்கப்பட்ட விமான நிறுவனமான 'கோ ஃபர்ஸ்ட்' நேற்று முன்தினம் திடீரென்று சேவைகளை தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக அறிவித்தது.

    details

    நிதி நெருக்கடிக்கு ப்ராட் & விட்னி தான் காரணம்: கோ ஃபர்ஸ்ட் 

    மேலும், தங்கள் நிறுவனத்தை திவாலானதாக அறிக்க வேண்டும் என்று கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளது.

    திடீரென்று புதன்கிழமை விமானங்கள் நிறுத்தப்பட்டதால் பல பயணிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.

    தங்கள் நிறுவனம் கடுமையான நிதி பற்றாக்குறையில் இருப்பதற்கு விமான இயந்திர உற்பத்தியாளர் பிராட் & விட்னி தான் காரணம் என்று கோ ஃபர்ஸ்ட் தெரிவித்துள்ளது.

    "ப்ராட் & விட்னி இன்ஜின்களை வழங்காததால், 'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இதனால், 'கோ ஃபர்ஸ்ட்' சேவைகளிடம் இருக்கும் பாதி விமானங்கள், அதாவது, 28 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன." என்று கோ ஃபர்ஸ்ட் தெரிவித்திருந்தது.

    இதை, பிராட் & விட்னி முற்றிலுமாக மறுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்  அமெரிக்கா
    டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு மு.க ஸ்டாலின்
    பாஸ்போர்ட்டில் இருந்து தந்தையின் பெயர் நீக்கம்: வெற்றி பெற்றார் மகனை தனியாக வளர்த்த தாய்  டெல்லி
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர் பாகிஸ்தான்

    விமானம்

    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி திருச்சி
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் சென்னை
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; இந்திய ராணுவம்
    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்-சங்கர் மிஸ்ராவிற்கு 4 மாதங்கள் ஏர்இந்தியா விமானத்தில் செல்ல தடை உலக செய்திகள்

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமானம்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025