NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 41 ஆண்டுகளுக்கு முன்: ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    41 ஆண்டுகளுக்கு முன்: ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா?
    41 ஆண்டுகளில், ஆஸ்திரியாவுடன் இந்தியாவின் நட்புறவு வளர்ச்சி அடைந்துள்ளது

    41 ஆண்டுகளுக்கு முன்: ஆஸ்திரியாவிலிருந்து ராணுவத்திற்காக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டது தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 11, 2024
    09:34 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்து கொண்டு இந்தியா திரும்பினார்.

    இந்த நிலையில், 41 வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரியாவிற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்ற போது என்ன நடந்தது என ஒரு ரிவைண்ட் பார்வை.

    அவரின் விஜயத்தின் போது, ராணுவ தளவாடங்களுக்கான ஒப்பந்தங்களை இட்டார் என செய்திகள் கூறுகிறது.

    குதிரை இறக்குமதியிலிருந்து தற்போது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் புதுமைகளை அதிகரிக்க ஒரு கூட்டு ஹேக்கத்தான் வரை, ஆஸ்திரியாவுடன் இந்தியாவின் நட்புறவு எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    ஒப்பந்தங்கள்

    எஃகு ஆலை, குதிரைகள் இறக்குமதி போன்ற பல ஒப்பந்தங்கள்

    இந்திரா காந்தி, ஜூன் 19, 1983 அன்று அவர் வியன்னாவுக்கு சென்றார்.

    அவரை அப்போதைய ஆஸ்திரியா அதிபர் பிரெட் சினோவாட்ஸ் வரவேற்றார். பிரதமர் இந்திரா காந்தி மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டார்.

    அப்போது, இரு நாட்டு தலைவர்களும் உலகளாவிய பொருளாதாரம், ஆப்கானிஸ்தான் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து கணிசமான விவாதங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவில் ஒரு பெரிய ஆஸ்திரிய எஃகுத் ஆலை மற்றும் மூன்றாம் நாடுகளில் கூட்டு முயற்சிகள், இந்திய மலைப் படைகளுக்கு 1,500 குதிரைகள் வழங்குவது ஆகியவையும் ஒப்பந்தமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    விமர்சனங்கள் இருந்தபோதிலும், இந்த சுற்றுப்பயணம் வெற்றிகரமாக ஐரோப்பிய நாடுகளிடையே இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வத்தை அதிகரித்தது.

    மோடி பயணம் 

    மோடியின் தற்போதைய பயணித்தால் போடப்பட்ட ஒப்பந்தங்கள்

    பிரதமர் மோடியின் தற்போதைய ஆஸ்திரியா பயணத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதித்த இரு தலைவர்களும் பெடரல் சான்சலரியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை ஊக்குவித்து, இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரிய நிறுவனங்களை அழைத்துள்ளார் பிரதமர் மோடி.

    மருந்து மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய மற்றும் ஆஸ்திரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு இடையே சாத்தியமான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் மோடி மற்றும் நெஹாம்மர் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரியா
    இந்திய ராணுவம்
    பிரதமர்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஆஸ்திரியா

    ஆஸ்திரிய அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி இந்தியா
    ஆஸ்திரியாவில் பிரதமர் மோடிக்கு இசை வரவேற்பு அளித்த கலாச்சார தூதர்: யாரிந்த விஜய் உபாத்யாயா? இந்தியா

    இந்திய ராணுவம்

    'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங்
    லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு லடாக்
    48 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் காஷ்மீர் என்கவுண்டர்: 3 அதிகாரிகள் பலி; ஒருவர் மாயம் ஜம்மு காஷ்மீர்
    அடர்ந்த காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை நெருங்கியது இந்திய ராணுவம்  ஜம்மு காஷ்மீர்

    பிரதமர்

    ஷெஹ்பாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகவும், மரியம் நவாஸ் பஞ்சாப் முதல்வராகவும் தேர்வு பாகிஸ்தான்
    குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: 28-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    தேர்தல் களம் 2024: பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக
    2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    பதவியேற்றதும் பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம்: இத்தாலியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்கிறார் பிரதமர்
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர்
    தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் பதவிக்காலம் நீட்டிப்பு; பிரதமரின் முதன்மை செயலாளராக PK மிஸ்ரா தொடர்வார் மத்திய அரசு
    G7 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் என்ன?  பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025