NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நடுங்கும் குளிர்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடுங்கும் குளிர்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு
    சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

    நடுங்கும் குளிர்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்புப் பணி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Nov 27, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க மீட்பு பணியாளர்கள் அயராது உழைத்து வரும் நிலையில், அப்பகுதியின் வானிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.

    தற்போது, உத்தரகாண்டின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதால், மீட்பு பணிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

    கடல் மட்டத்தில் இருந்து 4,000 மீட்டர் உயரம் உள்ள உத்தரகாண்ட் பகுதிகளில் பனி பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது மேலும் பீதியை கிளப்பியுள்ளது.

    கடந்த நவம்பர் 12ஆம் தேதி சில்க்யாரா சுரங்கப்பாதை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    அப்போதிலிருந்து 16 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

    ஆனால், அந்த சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

    டவ்ஜ்க

    மீட்பு பணிகளில் ஏற்படும் தொடர் சவால்கள் 

    சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஒரு குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை ஏற்பட வாய்ப்பிருப்பதால், மீட்பு பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.

    எனினும், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக மீட்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ஏற்கனவே, மீட்பு பணிகளின் போது தோண்டப்பட்ட துளைகள் பல முறை சரிந்து விழுந்ததால் தொழிலாளர்களை மீட்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட அதிநவீன டிரில்லிங் இயந்திரம் உட்பட இரண்டுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் சேதமடைந்ததாலும் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    இந்தியா

    காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு தமிழ்நாடு
    பாரா ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை போட்டியில் 4 தங்கம் வென்றது இந்தியா வில்வித்தை
    "பாகிஸ்தான் வீரர்களால் எனது வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை": முகமது ஷமி உலக கோப்பை
    டீப்ஃபேக்குகளுக்கு எதிராக நான்கு அம்ச உத்தியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார் டீப்ஃபேக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025