Page Loader
ஆண்ட்ராய்டு போனை தொடர்ந்து, ஐபோன்களிலும் வெளியான 'அவசர எச்சரிக்கை'

ஆண்ட்ராய்டு போனை தொடர்ந்து, ஐபோன்களிலும் வெளியான 'அவசர எச்சரிக்கை'

எழுதியவர் Venkatalakshmi V
Sep 29, 2023
05:22 pm

செய்தி முன்னோட்டம்

சில தினங்களுக்கு முன்னர், இந்தியாவில் உள்ள பல ஸ்மார்ட்போன்களில், சோதனை ஓட்டமாக, மத்திய அரசு 'அவசர எச்சரிக்கை' ஃபிளாஷ் செய்தி அனுப்பியதை தொடர்ந்து, இன்று பல ஐபோன்களிலும் இந்த முயற்சி நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த பிளாஷ் மெசேஜ்-ஐ பல பயனர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை இரு முறை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் முயற்சி செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு போன்களில் தோன்றியது போலவே, பெரிய பீப் ஒலியுடன், செல்போனின் தொடுதிரையில் தோன்றியது இந்த பிளாஷ் மெசேஜ் என பலரும் தெரிவித்துள்ளனர். எனினும் ஒரு சில பயனர்கள், தங்களுக்கு இது போன்று எந்தவொரு அறிவிப்பு செய்தியும் வரவில்லை என்றும் தெரிவித்தனர்

card 2

பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது

அனுப்பட்ட அந்த அவசரகால அறிவிப்பில்,"இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம், செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தியாகும். இந்தச் செய்தியைப் புறக்கணிக்கவும். எந்த நடவடிக்கையும் தேவையில்லை. இந்தச் செய்தி TEST Pan-India Emergency Alert System யால் அனுப்பப்பட்டது" என குறிப்பிடப்பட்டிருந்தது. மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் செல் ஒளிபரப்பு அமைப்புகளின் அவசர எச்சரிக்கை ஒளிபரப்பு திறன்களின் செயல்திறன் மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு, வெவ்வேறு பிராந்தியங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என்று தொலைத்தொடர்பு துறையின் செல் ஒளிபரப்பு அமைப்பு ஏற்கனவே தெரிவித்துள்ளது