NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி 
    மின்னல் தாக்கியதால்ல் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

    வட இந்தியாவில் தொடரும் கனமழை, வெள்ளம்: மின்னல் தாக்கி இருவர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 23, 2023
    12:59 pm

    செய்தி முன்னோட்டம்

    குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    குஜராத்திற்கு "ரெட் அலர்ட்" விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், அங்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று கணித்துள்ளது.

    இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சார் கிராமத்தில் மின்னல் தாக்கியதால்ல் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.

    நேற்று குஜராத்தில் இடைவிடாத மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஜூனாகத் மற்றும் நவ்சாரி ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த வாகனங்கள் மற்றும் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    ட்விட்டர் அஞ்சல்

    குஜராத்தில் இடைவிடாத மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 

    VIDEO | Flood-like situation in Junagadh, Gujarat amid heavy rainfall.

    (Source: Third Party) pic.twitter.com/NhOsjGewXJ

    — Press Trust of India (@PTI_News) July 22, 2023

    கிக்கா

    மகாராஷ்டிராவிற்கும் ரெட் அலர்ட்

    குஜராத்தின் தேவபூமி துவாரகா, பாவ்நகர், பருச், சூரத், தபி, வல்சாத் மற்றும் அம்ரேலி மாவட்டங்களிலும் நேற்று கனமழை பெய்தது.

    குஜராத் வெள்ளத்தில் இதுவரை 3 பேர் மூழ்கி உயிரிழந்தனர்.

    குஜராத்தின் ஜூனாகத், ஜாம்நகர், தேவபூமி துவாரகா, கட்ச், சூரத், வல்சாத், நவ்சாரி மற்றும் சூரத் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவிலும் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    இதனால், மகாராஷ்டிராவிலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா யவத்மால் மாவட்டத்தின் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

    ஜிவ்

    ஜம்மு-காஷ்மீரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன

    மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 27 ஆக உயர்ந்தது.

    ஜம்மு-காஷ்மீரின் அக்னூரில், பலத்த மழை பெய்ததால் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள செனாப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், நேற்று ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் இருந்து குறைந்தது 105 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இன்று ஹிண்டன் ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உத்தரபிரதேசத்தில் உள்ள கவுதம் புத்த நகர் மற்றும் காசியாபாத் மாவட்டங்கள் வெள்ள அபாயத்தில் சிக்கியுள்ளது.

    ஹிண்டன் என்பது யமுனை நதியின் துணை நதியாகும். எனவே, டெல்லி யமுனை நதியின் நீர்மட்டமும் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    யமுனையின் நீர்மட்டம் 205.75 மீட்டராக உயர்ந்துள்ளது 

    #WATCH | Water level of river Yamuna in Delhi increasing again, water level recorded at 205.75 m

    Visuals from Old Yamuna Bridge (Loha Pul) pic.twitter.com/sHD5nWbk3w

    — ANI (@ANI) July 23, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    குஜராத்
    ஜம்மு காஷ்மீர்
    ஹிமாச்சல பிரதேசம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி நிதின் கட்காரி
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    குஜராத்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! தேர்தல்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேர்தல்
    குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா? இந்தியா
    இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்கள் கைது இந்தியா

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    ஹிமாச்சல பிரதேசம்

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025