NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டபூர்வ நடவடிக்கைக்கு உறுதி: பன்னூன் படுகொலை சதி குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டபூர்வ நடவடிக்கைக்கு உறுதி: பன்னூன் படுகொலை சதி குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி
    சட்டபூர்வ நடவடிக்கைக்கு உறுதி: பன்னூன் படுகொலை சதி குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி

    சட்டபூர்வ நடவடிக்கைக்கு உறுதி: பன்னூன் படுகொலை சதி குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 20, 2023
    03:46 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல, இந்திய அதிகாரி சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக மவுனம் கலைத்தார்.

    தி பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், பிரதமர் மோடி, குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த ஆதாரத்தையும் தாம் கருத்தில் கொள்ளுவதாக கூறினார்.

    எவ்வாறாயினும், இது போன்ற "சில சம்பவங்கள்" அமெரிக்க-இந்திய உறவுகளை சீர்குலைக்காது என்று அவர் உறுதிப்பட கூறினார்.

    நவம்பரில், தி பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்திப்படி, அமெரிக்கா மண்ணில் பன்னுன் மீதான தாக்குதலை அமெரிக்கா முறியடித்ததாகவும், இந்த சதித்திட்டத்தில் இந்தியாவின் சாத்தியமான ஈடுபாடு குறித்து கவலை தெரிவித்ததாகவும் தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க இந்தியா ஒரு குழுவை நியமித்தது.

    card 2

    படுகொலை சதி குறித்த தகவல்களை ஆய்வு செய்வோம்: பிரதமர் மோடி

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தா என்ற இந்திய நாட்டவர், ஜூன் 30 அன்று செக் குடியரசில் கைது செய்யப்பட்டார் என்றும், அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்காக காத்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சூழலில், பைனான்சியல் டைம்ஸ்-இடம் பேசிய பிரதமர் மோடி, "யாராவது எங்களுக்கு ஏதாவது ஆதாரம் கொடுத்தால், நாங்கள் அதை கருத்தில் எடுத்துக்கொள்ளவோம்" என்று கூறினார்.

    "நம் நாட்டின் குடிமகன் ஏதாவது நல்லது அல்லது கெட்டது செய்திருந்தால், அதை நாங்கள் கவனிக்கத் தயாராக இருக்கிறோம். சட்டத்தின் படி நடப்பதற்கு நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

    எனினும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் வன்முறையைத் தூண்டும் தீவிரவாதக் குழுக்கள் குறித்து மோடி கவலை தெரிவித்தார்.

    card 3

    "இதுபோன்ற சம்பவங்களால் இந்தியா-அமெரிக்க உறவுகளை சீர்குலைக்க முடியாது" 

    இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து கருத்து தெரிவித்த மோடி, "இந்த உறவை வலுப்படுத்துவதற்கு, வலுவான இருதரப்பு ஆதரவு உள்ளது. இது முதிர்ந்த மற்றும் நிலையான கூட்டாண்மைக்கான தெளிவான குறிகாட்டியாகும்" என்று கூறினார்.

    "பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு" இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பின் முக்கிய அங்கம் என்று அவர் விவரித்தார்.

    எவ்வாறாயினும், பன்னூன் படுகொலை சதித்திட்டத்தை குறிப்பிடும் சில சம்பவங்களினால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்படாது என்று அவர் வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    அமெரிக்கா
    இந்தியா

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    பிரதமர் மோடி

    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் கத்தார்
    டெல்லி கர்தவ்யா பாதையில் நினைவு பூங்காவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்  டெல்லி
    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை  தமிழிசை சௌந்தரராஜன்
    கசப்பான உறவே என் மீதான புகாருக்கு காரணம்: எம்பி மஹுவா மொய்த்ரா திரிணாமுல் காங்கிரஸ்

    அமெரிக்கா

    23 புதிய செயற்கைகோள்களை ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 மூலம் விண்ணில் செலுத்திய ஸ்டார்லிங்க் எலான் மஸ்க்
    விளம்பரதாரர்களின் புறக்கணிப்பால் திவாலாகும் நிலையை நோக்கிச் செல்கிறதா எக்ஸ்? எலான் மஸ்க்
    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் கர்ப்பிணிப் பெண் பலி, நான்கு பேர் காயம் பிலிப்பைன்ஸ்
    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் ஜோ பைடன்

    இந்தியா

    நாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம்  தமிழ்நாடு
    மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் - கேரளாவில் ஒருவர் பலி  கேரளா
    2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை உலகம்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025