NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்; உறுதிப்படுத்திய வானிலை ஆய்வு மையம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்; உறுதிப்படுத்திய வானிலை ஆய்வு மையம் 
    வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்

    வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்; உறுதிப்படுத்திய வானிலை ஆய்வு மையம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 29, 2024
    12:43 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் அடுத்த 3 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாகும் என இன்று உறுதிபட அறிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுவதற்கான வலுவை இழந்த நிலையில் தற்போது, இது சென்னைக்கு தென் கிழக்கில் 470 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

    முன்னதாக, வானிலை மையம், இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என்றும், நாளை மாலைக்குள் மேலும் வலுவிழக்கும் எனத்தெரிவித்திருந்தது.

    ஆனால் தற்போது, அது பெங்கல் புயலாக மாறுவதாக வானிலை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    pic.twitter.com/nBo3A4T0BQ

    — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 29, 2024

    அறிவிப்பு

    வானிலை மையத்தின் அறிவிப்பு

    தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயலாக மாறி, அடுத்த 3 மணி நேரத்தில் பெங்கல் புயலாக உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

    வடமேற்குதிசையில் நகர்ந்து, நாளை (நவ. 30) காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

    புயல் கரையை கடக்கும் போதே, 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்ததன் படி, நாளை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புயல் எச்சரிக்கை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி
    துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா துருக்கி
    போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் உச்ச நீதிமன்றம்

    புயல் எச்சரிக்கை

    தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: அடுத்த 3 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    மிக்ஜாம் புயல்: சென்னை மக்களுக்கு CMDA வெளியிட்டுள்ள அறிவிப்பு  சென்னை
    மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு மு.க ஸ்டாலின்
    புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை

    வானிலை ஆய்வு மையம்

    அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? வானிலை அறிக்கை
    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; இந்த மாவட்டங்களில் மட்டும் வானிலை அறிக்கை
    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் தமிழகம்
    இந்தியாவில் தொடர்ந்து 6வது ஆண்டாக 'இயல்பான மழை பொழிவு' பதிவாகியுள்ளது மழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025