NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல்
    விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

    விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 28, 2024
    11:14 am

    செய்தி முன்னோட்டம்

    விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தைத் தொடர்ந்து பற்றியெரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அதற்காக பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே திருமுருகன் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.

    இங்கு சனிக்கிழமை (செப்டம்பர் 28) அதிகாலை யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் ஏற்பட்ட அதிர்வு பல கிலோமீட்டர் தூரம் வரை உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து உடனடியாக சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காரணம்

    வெடிவிபத்திற்கான காரணம்

    இந்த வெடிவிபத்து மிகப்பெரிய அளவில் நடந்துள்ளதால், தீ பட்டாசு ஆலையின் பெரும்பாலான பகுதிகளில் பரவி கொழுந்துவிட்டு எரிகிறது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    பட்டாசு ஆலையில் நடந்த விபத்து அதிகாலை நேரம் என்பதால், அதிர்ஷ்டவமாக ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    எனினும், உள்ளே யாரேனும் ஒரு சிலர் சிக்கியுள்ளாரா என்பதையும் கண்டறியும் பணியையும் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்ட பிறகே வெடி விபத்திற்கான காரணம் குறித்து முழுமையாக தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்துhttps://t.co/WciCN2SiwX | #Virudhunagar | #Sattur | #Crackers | #Factory | #Accident | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/Hfu8bctM5k

    — News7 Tamil (@news7tamil) September 28, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விருதுநகர்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் மாவட்ட செய்திகள்
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது தமிழ்நாடு
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழகம் முழுவதும் போரட்டத்தில் குதித்த தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது என்ன? தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    வலுக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம் தமிழகம்
    மத்திய வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு; வானிலை அறிக்கை வானிலை அறிக்கை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    பயணிகளின் வசதிக்காக சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்களின் சேவை இன்று (செப்.9) முதல் தொடக்கம் சென்னை

    மாவட்ட செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் போக்குவரத்து காவல்துறை
    தருமபுரியில் ஆஸ்கர் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை பலி தமிழ்நாடு
    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025