NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி
    அடுத்த செய்திக் கட்டுரை
    க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி
    சென்னை பெண் மென்பொருள் பொறியாளர் கொடூர கொலையில் முன்னாள் காதலர் கைது. (சித்தரிப்பு புகைப்படம்).

    க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி

    எழுதியவர் Srinath r
    Dec 24, 2023
    01:28 pm

    செய்தி முன்னோட்டம்

    செங்கல்பட்டு திருப்போரூர் பகுதியில் பெண் மென்பொருள் பொறியாளர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் பொன்மார் பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடத்தில், நேற்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண் பாதி எரிந்த நிலையில் உயிருக்கு போராடி வந்துள்ளார்.

    இப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்துள்ளனர். மேலும், அவர் குறித்த விவரம் கேட்டபோது வெற்றிமாறன் என்பவரை தொலைபேசி எண்ணை அப்பெண் வழங்கியுள்ளார்.

    இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    2nd card

    முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த முன்னாள் காதலர்

    போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண் நந்தினி,25, என்பதும், சென்னை பெருங்குடியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

    மேலும், நந்தினி வழங்கிய தொலைபேசி எண் மூலம் வெற்றிமாறனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைத்தனர். அங்கு வந்த வெற்றிமாறன், நந்தினி உயிரிழந்தது கேட்டு கதறி அழுதார்.

    நந்தினி என் சொந்த ஊர் மதுரை மாவட்டம் என்றும், கண்ணகி நகரில் உள்ள அவரது சித்தப்பா ராஜரத்தினம் என்பவரின் வீட்டில் தங்கி இருந்து பணி செய்து வருவதாகவும், வெற்றிமாறன் போலீசாரிடம் தெரிவித்தார்.

    வழக்கு குறித்த போலீசாரின் தொடர் விசாரணையில், வெற்றிமாறன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.

    3rd card

    காதலை மறுத்ததால் ஆத்திரத்தில் திருநம்பி வெறிச்செயல்

    போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில், நந்தினியை கொலை செய்ததை வெற்றிமாறன் ஒப்புக்கொண்டார்.

    நந்தினியின் முன்னாள் காதலரான வெற்றிமாறன், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி எனக் கூறப்படுகிறது. இந்த உண்மை நந்தினிக்கு தெரிய வரவே, அவர் வெற்றிமாறனின் காதலை துண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் நந்தினி, ராகுல் என்ற வேறொரு நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெற்றிமாறன், அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, நந்தினியின் பிறந்த நாளான நேற்று அவரை தனியாக சந்திக்க வேண்டும் என அழைத்துள்ளார்.

    காலையிலிருந்து முதியோர் இல்லம் மற்றும் கோவில் என, பல்வேறு இடங்களுக்கு இருவரும் சென்று வந்துள்ளனர்.

    4th card

    சர்ப்ரைஸ் தருவதாக கூறி கொலை செய்த முன்னாள் காதலன்

    மாலையில் பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாக கூறி, பொன்மார் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு நந்தினியை, வெற்றிமாறன் அழைத்து வந்துள்ளார்.

    பின் அவரின் கை கால்களை சங்கிலியால் கட்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார்.

    பின்னர் பெட்ரோல் ஊற்றி அவரைக் கொளுத்தி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

    நந்தினியை கொலை செய்ததை வெற்றிமாறன் ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, தாழம்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    செங்கல்பட்டு
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கொலை

    6 மர்மநபர்கள், 2 பைக்குகள், 50 தோட்டாக்கள்: நிஜ்ஜார் கொலை வழக்கில் CCTV பதிவு வெளியானதாக தகவல் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட மணிப்பூர் மணிப்பூர்
    பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி   க்ரைம் ஸ்டோரி
    கடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா? கடலூர்

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  கர்ப்பம்
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி  அரசு மருத்துவமனை

    காவல்துறை

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார் ஜம்மு காஷ்மீர்
    எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம் எம்பிபிஎஸ்
    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது  அமெரிக்கா
    அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு  பீகார்

    காவல்துறை

    நாகர்ஜுன சாகர் அணை திறப்பு விவகாரம் : ஆந்திரா-தெலுங்கானா இடையே கடும் மோதல் ஆந்திரா
    பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க மாநாட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர் பிலிப்பைன்ஸ்
    பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் குண்டுவெடிப்பு
    'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி ராஜஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025