NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொறியியல் மாணவி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொறியியல் மாணவி
    புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொறியியல் மாணவி

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 25, 2024
    03:10 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் இரண்டாமாண்டு மாணவி புதன்கிழமை காலை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

    புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று அதிகாலை அந்த மாணவி தனது ஆண் நண்பருடன் வளாகத்தில் திறந்த வெளியில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம நபர்கள் இருவர் அந்த ஆண் நண்பரை தாக்கியுள்ளனர்.

    பின்னர் அவர்கள் மாணவியை புதர்களுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக டெக்கான் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டுர்புரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது#SunNews | #AnnaUniversity | #ChennaiPolice pic.twitter.com/ZGTKrGQAAy

    — Sun News (@sunnewstamil) December 25, 2024

    சம்பவம்

    விவகாரம் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை

    பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவி, வளாகத்தில் உள்ள விடுதியில் வசிக்கும் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவி ஆவர்.

    அவர் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவருடன் வாக்கிங் சென்றதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

    அப்போது வளாகத்தின் பின்புறத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இது குறித்து அண்ணா யூனிவர்சிட்டி பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவகாரம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

    அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உயர்கல்வித்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்களும் கண்டனங்களை எழுப்பியுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - பதிவாளர் அறிக்கை#SunNews | #AnnaUniversity pic.twitter.com/kvf07cAubQ

    — Sun News (@sunnewstamil) December 25, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அண்ணா பல்கலைக்கழகம்
    சென்னை
    பாலியல் வன்கொடுமை
    பாலியல் தொல்லை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அண்ணா பல்கலைக்கழகம்

    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்  பொறியியல்
    பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை., பொறியியல்
    பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள் பொறியியல்
    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு; அடுத்தாண்டு அமல் உயர்கல்வித்துறை

    சென்னை

    சென்னை மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் BMW கார் மோதியதில் கொல்லப்பட்ட ராபிடோ ஓட்டுநர் விபத்து
    தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து தீர்ப்பு தேதி அறிவிப்பு தனுஷ்
    சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதாக ஹூண்டாய் அறிவிப்பு ஹூண்டாய்
    சென்னை மக்களின் கவனத்திற்கு; மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம் மெட்ரோ

    பாலியல் வன்கொடுமை

    மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக IIT-BHU வில் போராட்டம் உத்தரப்பிரதேசம்
    50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது: ஹரியானாவில் பரபரப்பு  ஹரியானா
    பொருளாதார குற்றவாளிகளுக்கு கை விலங்குகள் பயன்படுத்தக்கூடாது- பாராளுமன்ற குழு பரிந்துரை நாடாளுமன்றம்
    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது சென்னை

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025