NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
    அனைத்து மாநிலங்களுக்கும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்

    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 09, 2023
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை இன்று(அக் 9) நண்பகல் 12:30 மணியளவில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதியும், மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    அனைத்து மாநிலங்களுக்கும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிபிகேவ்ஜ்

    ஐந்து மாநிலங்களிலும் பாலின விகிதம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது

    மிசோரம் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ம் தேதியுடன் முடிவடைகிறது.

    வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியில் உள்ளது.

    தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது. தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி(BRS) கட்சி ஆட்சி செய்து வருகிறது.

    மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

    "ஐந்து மாநிலங்களிலும் உள்ள 679 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது." என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

    ஐந்து மாநிலங்களிலும் பாலின விகிதம் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தேர்தல் ஆணையம்
    தேர்தல்
    தெலுங்கானா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    பெண் பயணிகளுக்கு பக்கவாட்டு இருக்கை.. ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு! ஏர் இந்தியா
    Asian Games அக்டோபர் 5: ஒரே நாளில் ஹாட்ரிக் அடித்த இந்தியா; வில்வித்தை போட்டியில் மூன்றாவது தங்கம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆசிய விளையாட்டில் சீன அதிகாரிகளின் தில்லுமுல்லு; அஞ்சு பாபி ஜார்ஜ் கோபம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    இங்கிலாந்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர் கைது இங்கிலாந்து

    தேர்தல் ஆணையம்

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு உச்ச நீதிமன்றம்
    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈரோடு

    தேர்தல்

    ஈபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை - அமித்ஷா  அமித்ஷா
    காங்கிரஸ் வேட்பாளர் சகோதரர் வீட்டில் மரத்தில் பதுக்கிவைத்த ரூ.1 கோடி பறிமுதல்  காங்கிரஸ்
    எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியினை பிடிக்கும்?-ஜோதிடருக்கு பரிசுத்தொகை அறிவித்த மருத்துவர்  கர்நாடகா
    கர்நாடக தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடையும் 92 சதவீத பெண் வேட்பாளர்கள் இந்தியா

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து ஆந்திரா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது ஆந்திரா
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025