NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 
    மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

    மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Dec 12, 2023
    06:44 pm

    செய்தி முன்னோட்டம்

    வைகை மற்றும் முல்லை பெரியாறு அணைகளிலிருந்து மேலூர் தொகுதி விளைநிலங்களுக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயம் செய்ய தேவையான தண்ணீரை அணைகளிலிருந்து குறித்த காலத்திற்குள் திறக்க விடியோ திமுக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் விவசாயிகள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    அதிமுக ஆட்சி காலத்தில் தகுந்த நேரத்தில் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணத்தினால் விவசாயிகள் பயனடைந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அதில், அணைகளில் போதிய தண்ணீர் இருக்கும் நிலையிலும் விடியோ திமுக அரசு திறக்கவில்லை என்றும்,

    இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் விடியோ அரசிடம் பலமுறை கோரிக்கைகளை வைத்தும் பயனில்லை என்று விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

    ஆர்ப்பாட்டம் 

    பெரும் திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு 

    தொடர்ந்து, குடும்ப நலன் மட்டும் கருதி செயல்படும் இந்த அரசின் முதல்வர் விவசாயம் செய்ய தேவையான தண்ணீரை திறந்துவிடாதது கண்டனத்திற்குரியது.

    இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு விரைவில் வரவுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    இந்நிலையில், முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காத விடியோ திமுக அரசை கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வரும் 15ம் தேதி காலை 10 மணியளவில் மதுரை மேலூரில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக சார்பில் நடத்தப்படவுள்ளது என்று அறிவித்துள்ளார்.

    இதில் பொதுமக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    எடப்பாடி கே பழனிசாமி
    திமுக
    அதிமுக

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    மதுரை

    மதுரை சமையலர்களைப் பாராட்டிய 'மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா' கேரி மெஹிகன் ஆஸ்திரேலியா
    மதுரை-கோவா விமான சேவை துவங்கியது விமான சேவைகள்
    கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மத்திய அரசு
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு  எய்ம்ஸ்

    எடப்பாடி கே பழனிசாமி

    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக
    அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் அதிமுக
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு அதிமுக
    சென்னையில் ஏப்ரல் 7ம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து அதிமுக

    திமுக

    'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு  காங்கிரஸ்
    'உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்': பிரதமர் மோடி  உதயநிதி ஸ்டாலின்
    'சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவோம்' - உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு  சனாதன தர்மம்
    'இந்து மதம் உலகத்திற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது': ஆ.ராசாவின் வீடியோவை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை  தமிழ்நாடு

    அதிமுக

    நாடாளுமன்ற தேர்தல் - திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம்  நாடாளுமன்றம்
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - சிபிஐ விசாரணை கோரும் அதிமுக எம்.பி.தம்பிதுரை சிபிஐ
    சென்னையில் எம்.ஜி.ஆர். சிலை மீது பெயிண்ட் ஊற்றியதால் பரபரப்பு  எம்ஜிஆர்
    ஓ.பன்னீர் செல்வம் மகனான எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்னும் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025