NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜி விவகாரம்: 3 நாளாகியும் விசாரணை தொடர முடியாமல் திணறும் அமலாக்கத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜி விவகாரம்: 3 நாளாகியும் விசாரணை தொடர முடியாமல் திணறும் அமலாக்கத்துறை
    அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்ற போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி விவகாரம்: 3 நாளாகியும் விசாரணை தொடர முடியாமல் திணறும் அமலாக்கத்துறை

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 19, 2023
    11:16 am

    செய்தி முன்னோட்டம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடாக பணம் பெற்ற விவகாரத்தில், சென்ற வாரம், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    விசாரணையின் போது அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரை சோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 இடங்களில், 90% அடைப்பு இருப்பதாகவும், இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டது.

    அதன்பின்னர் தொடர்ந்த நிகழ்வுகளில், அவரை 15 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறை அனுமதி கோரி இருந்தது.

    ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், 8 நாள் காவலுக்கு அனுமதி அளித்தது.

    இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரியிருந்தனர்.

    card 2

    காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி தரப்பு மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது.

    இதனையடுத்து, கடந்த வெள்ளிகிழமை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி, ICU வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவர் உடல்நிலை சீரான பிறகுதான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் எனவும் மருத்துமனை அறிக்கை வெளியிட்டது.

    அதனால், அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்தும், விசாரணையை தொடர முடியாமல் திணறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் மருத்துமனையில் பொருத்தப்பட்டுள்ள CCTV மூலமாக, செந்தில் பாலாஜியை யாரெல்லாம் தொடர்பு கொள்கின்றனர் என்பதையும் அமலாக்கத்துறையினர் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தமிழ்நாடு செய்தி
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ.5000 அபராதம்: நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை  தமிழகம்
    தமிழகத்தில் 2வது வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு  வந்தே பாரத்
    தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி - ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை - தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர்  பைக்

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி
    இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள் செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025