NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீட் 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீட் 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை 

    நீட் 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 08, 2024
    10:29 am

    செய்தி முன்னோட்டம்

    நீட் தேர்வு 2024ல் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஐஎம்ஏ ஜூனியர் மருத்துவர்கள் அமைப்பு கோரியுள்ளது.

    "அனைத்து மாணவர்களும் நியாயமான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு பெற வேண்டும்" என்று அந்த டாக்டர்கள் அமைப்பு கூறியுள்ளது.

    ஐஎம்ஏ ஜூனியர் மருத்துவர்கள் அமைப்பு, NTAக்கு எழுதிய கடிதத்தில், சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் காணப்பட்ட முறைகேடுகள் மற்றும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.

    நீட் தேர்வில் சில மாணவர்கள் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகவும், இது புள்ளிவிவர ரீதியாக கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    "மாணவர்களுக்கு வழங்கப்படும் கருணை மதிப்பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட தர்க்கம் எதுவும் இல்லை. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களின் விவரங்கள் பகிரப்படவில்லை" என்று அந்த கடிதம் கூறுகிறது.

    இந்தியா 

    நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு 

    மேலும், நீட் 2024 தேர்வின் கேள்வி தாள்கள் பல இடங்களில் கசிந்ததாகவும், ஆனால் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

    NEET-UG இல் கட்-ஆஃப் மற்றும் டாப்பர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தேர்வின் போட்டித் தன்மையை பிரதிபலிக்கிறது என்றும், தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்படவில்லை என்றும் தேசிய தேர்வு முகமை(NTA) கடந்த வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது.

    மே 5 அன்று 14 வெளிநாடுகள் உட்பட 571 நகரங்களில் உள்ள 4,750 மையங்களில் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் நடத்தப்பட்டது.

    அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகவும், அதனால் தான் மதிப்பெண்களும் கட்-ஆஃப்களும் அதிகரித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தேசிய தேர்வு முகமை(NTA) மேற்கூறிய விளக்கத்தை அளித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    சிபிஐ
    இந்தியா

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்

    இந்தியா

    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா
    இன்னோவா ஹைக்ராஸ் ZX வகைகளுக்கான முன்பதிவுகளை மீண்டும் நிறுத்தியது டொயோட்டா இந்தியா டொயோட்டா
    வட இந்தியாவுக்கு ரெட் அலர்ட்: அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி வரை உயரக்கூடும் வெப்ப அலைகள்
    விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய சுற்றுலாப் பயணி தேசிய கொடியை ஏந்தி பரவசம்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025