LOADING...
விமானிகளுக்கான விமான நேர விதிகளை மீறிய ஏர் இந்தியாவிற்கு டிஜிசிஏ கடும் எச்சரிக்கை
விமானிகளுக்கான விமான நேர விதிகளை மீறியது ஏர் இந்தியா

விமானிகளுக்கான விமான நேர விதிகளை மீறிய ஏர் இந்தியாவிற்கு டிஜிசிஏ கடும் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2025
03:25 pm

செய்தி முன்னோட்டம்

சிவில் விமானப் போக்குவரத்துத் தேவை (சிஏஆர்) வரம்பை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது, இது விமான நிறுவனத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆய்வை அதிகரித்துள்ளது. டிஜிசிஏவின் எச்சரிக்கையின்படி, ஏர் இந்தியா தனது பெங்களூரு-லண்டன் சேவையை (AI133) மே 16 மற்றும் 17, 2025 ஆகிய தேதிகளில் இயக்கியது. ஒவ்வொரு விமானமும் சிஏஆர் பிரிவு 7, தொடர் J, பகுதி III இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட 10 மணி நேர விமானி கடமை வரம்பை மீறியது கண்டறியப்பட்டு உள்ளது.

ஒழுங்குமுறை

விமானிகளுக்கான வரம்பு ஒழுங்குமுறை

ஏப்ரல் 24, 2019 அன்று வெளியிடப்பட்ட இந்த ஒழுங்குமுறை, விமானி விழிப்புணர்வை உறுதி செய்வதையும் விமானப் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களைப் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் இந்த விதிமீறலை ஒப்புக்கொண்டார். முன்னதாக, ஏப்ரல் 24 அன்று பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமான நிறுவனங்களுக்கு மூடியதை அடுத்து, இந்த வீதியிலிருந்து குறிப்பிட்ட சில விமான சேவைகளுக்கு சிறப்பு தளர்வு வழங்கப்பட்டது. எனினும், வான்வெளி மூடலால் பாதிக்கப்படாத விமானங்களுக்கு ஏர் இந்தியா இந்த விலக்கை தவறாக பயன்படுத்தியதாக டிஜிசிஏ கண்டறிந்ததை அடுத்து தற்போது எச்சரிக்கை வந்துள்ளது. விமானக் கடமை வரம்புகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதிசெய்யவும், விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை நிலைநிறுத்தவும் விமான நிறுவனத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.