NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள்
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள்

    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள்

    எழுதியவர் Nivetha P
    Dec 12, 2023
    08:23 pm

    செய்தி முன்னோட்டம்

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

    கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் திருப்பதி கோயிலில் பின்பற்றப்படும் மாடல் க்யூ இங்கும் பின்பற்றப்படுகிறது என்று கூறப்படுகிறது.

    அதன்படி, பக்தர்கள் மொத்தமாக தேக்கி வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பப்படுகிறார்களாம்.

    எனினும் கூட்ட நெரிசலை சமாளிக்க இயலவில்லை என்று தேவசம் போர்டு சார்பில் கூறப்பட்டுள்ளது.

    மற்றொரு பக்கம் போதிய வசதிகள் செய்துதரப்படவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

    பம்பைக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும்,

    வரும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலைமோதும் நிலையில், பாதுகாப்பு பணியில் போதிய காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    கூட்டம் 

    பம்பையிலேயே பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருக்கவேண்டிய அவல நிலை

    சன்னிதானத்தில் கூட்டத்தினை குறைக்கும் வகையில் பம்பையில் பக்தர்கள் கட்டுப்படுத்தப்படுவதால் அங்கேயே பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே குழந்தைகள் தரிசனம் மேற்கொள்ள மட்டும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

    கூட்ட நெரிசல் காரணமாக பந்தளம் கோயிலில் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்காமல் பல பக்தர்கள் வீடு திரும்பும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாடு, கர்நாடகா மட்டுமின்றி கேரளா பக்தர்கள் பலரும் கூட சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி செல்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் இம்முறை திரண்டு வந்ததால் நிலைமையை சமாளிக்க இயலவில்லை என்று தேவசம்போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சபரிமலை
    திருப்பதி
    தமிழ்நாடு
    காவல்துறை

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    சபரிமலை

    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  கேரளா
    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  கேரளா

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    தமிழ்நாடு

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட் செய்திகள்
    ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பிபின் ராவத் - விசாரணையினை கைவிட்ட காவல்துறை ? தமிழக காவல்துறை
    இன்று 10 தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு புதுச்சேரி
    முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்

    காவல்துறை

    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது சென்னை
    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு விபத்து
    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை  விருதுநகர்
    Explained- தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக என்ன சர்ச்சை? திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025