NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவிரி விவகாரம்: கர்நாடகாவில் 44 விமானங்கள் ரத்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன
    அடுத்த செய்திக் கட்டுரை
    காவிரி விவகாரம்: கர்நாடகாவில் 44 விமானங்கள் ரத்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன
    கர்நாடகா பந்த்: பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    காவிரி விவகாரம்: கர்நாடகாவில் 44 விமானங்கள் ரத்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 29, 2023
    02:01 pm

    செய்தி முன்னோட்டம்

    காவிரி நதிநீரை தமிழகத்திற்கு திறந்துவிடக் கோரி கர்நாடகாவில் கன்னட ஆதரவு அமைப்புகள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்டு தரையிறங்கவிருந்த 44 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    கன்னட சலவலி, கர்நாடக ரக்ஷனா வேதிகே மற்றும் பிற விவசாயிகள் அமைப்புகளின் பிரிவுகளை உள்ளடக்கிய கன்னட ஒக்குடா என்ற ஒருங்கிணைந்த அமைப்பால் இந்த கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    card 2

    பெங்களூரில் மூடப்பட்ட வணிக நிறுவனங்களின் பட்டியல்

    மேலும், பெங்களூருவில் உள்ள டவுன்ஹாலில் இருந்து ஃப்ரீடம் பார்க் வரை மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விடியற்காலை முதல் அந்தி வரையிலான பந்த் நேரத்தில் , போராட்டக்காரர்கள் ரயில் சேவைகள், நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் மற்றும் விமான நிலையங்களை மூட முயற்சிப்பார்கள்.

    அனைத்து மால்கள், கடைகள், உணவகங்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் மூடப்பட்டிருக்கும். ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவைகளும் இயங்காது.

    card 3

    144 தடை உத்தரவு; பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன

    மறுபுறம், மாண்டியா மற்றும் பெங்களூரு செயல்பட்டுவரும் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்தா, பெங்களூரில் பந்த் அனுமதிக்கப்படாது என்று கூறினார், சட்டம் ஒழுங்கை பராமரிக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்சிபி) பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

    card 4

    மாநில போக்குவரத்து துறை சேவைகளை தொடர்கிறது

    இருப்பினும், மாநில போக்குவரத்துத் துறை தனது சேவைகளைத் தொடரும், மேலும் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில் பெங்களூரு மெட்ரோவும் வெள்ளிக்கிழமை செயல்படும் என்று பிசினஸ் டுடே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது .

    வேலைநிறுத்தத்தின் போது எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளும் நபர்களுக்கு உதவ, 9498215407 மற்றும் 9498170430 என்ற எண்களுடன், அதிகாரிகள் உதவி மையத்தைத் திறந்துள்ளனர்.

    card 5

    காவிரி நதி நீர் பிரச்சனை பற்றிய விவரங்கள்

    கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்தின் முக்கிய ஆதாரமான காவிரி நதிநீர் பிரச்சனை இரு அண்டை மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்து வருகிறது.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு செப்டம்பர் 18 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து பிரச்சினை வெடித்தது.

    புதன்கிழமை காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தண்ணீரை 3,000 கனஅடியாகக் குறைத்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், டெல்லியில் கூடவிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவிரி
    கர்நாடகா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    காவிரி

    காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
     'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள்  சினிமா
    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை தமிழ்நாடு
    காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு சித்தராமையா

    கர்நாடகா

    அதிர்ச்சி : 24 வயதில் தேசிய கைப்பந்து வீராங்கனை மாரடைப்பால் மரணம்! கைப்பந்து
    மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க தமிழக அரசை நாடுவோம்: கர்நாடக துணை முதல்வர்  தமிழ்நாடு
    கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான்.. எப்போது துவக்கம்? பெங்களூர்
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025