NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் புத்த மதப்படி நல்லடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் புத்த மதப்படி நல்லடக்கம்
    BSP தேசிய தலைவர் மாயாவதி, மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்

    கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் புத்த மதப்படி நல்லடக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 08, 2024
    07:54 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், நேற்று இரவு பொத்தேரியில் புத்தமதப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

    முன்னதாக அவரது உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடுத்த மனுவை நீதிமன்றம் ஏற்று கொள்ளவில்லை.

    அதனால் மாற்று இடமாக பொத்தூரை அவரது மனைவி பரிந்துரைக்க, அதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

    இதனையடுத்து, பெரம்பூர் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், நேற்று மாலை 4.45 மணியளவில் பொத்தூருக்கு இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    இறுதி ஊர்வலத்தில் அவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    புத்த மதப்படி சடங்கு

    புத்த மதத்தினை தீவிரமாக பின்பற்றும் ஆர்ம்ஸ்ட்ராங்

    நேற்று இரவு பெய்த மழையினால், அவரின் உடல் பொத்தூரை அடைய இரவு 10 மணி ஆனது.

    அங்கு புழல் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள இடத்தில், அவரின் உடலுக்கு புத்தமத முறைப்படி இறுதிசடங்கு நடைபெற்றது.

    இதற்காக கர்நாடகா மாநிலத்தில் இருந்து 7 புத்த பிட்சுகள் மற்றும் 5 வாசனை திரவங்கள் வரவழைக்கப்பட்டிருந்தது.

    இதைக்கொண்டு அவரது உடலை தூய்மைப்படுத்தப்பட்டு, வெண்ணிற ஆடை உடுத்தி சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

    ஆர்ம்ஸ்ட்ராங், அம்பேத்கர் வழியில் தானும் புத்த மதத்தினை பின்பற்றுபவர்.

    ஆண்டுதோறும், நாக்பூரில் உள்ள புத்த வழிபாட்டு தலத்துக்கு அவர் செல்வது வழக்கம் எனக்கூறப்படுகிறது.

    அதேபோல, 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பூரில் அவர் வசிக்கும் பகுதி அருகே, ஒரு புத்த கோயிலை ஆம்ஸ்ட்ராங் கட்டியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 22 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 25 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 26 தங்கம் வெள்ளி விலை
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்தது  தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025