NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களை மிரட்டினார்: டெல்லி போலீசார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களை மிரட்டினார்: டெல்லி போலீசார்
    பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களை மிரட்டினார்: டெல்லி போலீசார்

    பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களை மிரட்டினார்: டெல்லி போலீசார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 05, 2024
    06:12 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீரர்களை மிரட்டியதாகவும், போராட்டத்தை கைவிட்டு அமைதியாக போகும்படியும் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பெண் மல்யுத்த வீரர்களால் தொடரப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணையின் போது, காவல்துறையினர் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

    முன்னாள் WFI தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாமா என்பது குறித்த புதிய வாதத்தைத் தொடங்கிய டெல்லி காவல்துறையின் சமர்ப்பிப்புகள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

    மல்யுத்த வீரர்களின் அறிக்கையை வாசித்த போலீஸ் வழக்கறிஞர், அதில் " நீங்கள் மல்யுத்தத்தை தொடர விரும்பினால் அமைதியாக இருங்கள்....உங்களின் தொழிலை நான் மனதுவைத்தால் அழித்துவிட முடியும்" என மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது.

    card 2

    சட்டப்படி குற்றம் என வாதிட்ட அரசு வழக்கறிஞர் 

    இந்த அறிக்கையை வாசித்த பின்னர், டெல்லி காவல்துறை வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா, பிரிஜ் பூஷனின் கருத்துக்க்கள், அச்சுறுத்துவது, குற்றவியல் மிரட்டல் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 506 இன் கீழ் குற்றமாகும் என்று வாதிட்டார்.

    மேலும் மற்றொரு புகார்தாரரின் அறிக்கையை மேற்கோள் காட்டி, ஸ்ரீவஸ்தவா, பிரிஜ் பூஷன் தன்னிடம், " ஒரு பெண் வீராங்கனையிடன், 'என்னுடைய தோதி-குர்தா உடையில் நான் எப்படி இருக்கிறேன்?' என கேட்டுள்ளார். இது ஒரு பெண்ணிடம் கேட்க வேண்டிய கேள்வியா?" என்று கேள்வி எழுப்பினார்.

    card 3

    கேள்விகளை அடுக்கிய காவல்துறை வழக்கறிஞர் 

    மல்யுத்த வீரரின் புகாரை மேற்கோள் காட்டி, WFI இன் முன்னாள் உதவிச் செயலாளரான வினோத் தோமரின் அலுவலகத்திற்குள் பெண்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவதாகவும், ஆண்களுக்கு அனுமதி இல்லை எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது அவரின் நோக்கத்தை காட்டுகிறது எனவும் வழக்கறிஞர் வாதாடினார்.

    பிரிஜ் பூஷன் ஒரு மல்யுத்த வீரரை கட்டிப்பிடித்த சம்பவத்தையும் டெல்லி காவல்துறை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

    கட்டியணைத்த பின்னர் அது ஒரு "தந்தையின் செயல்" என்று பிரிஜ் பூஷன் கூறியதாகவும், "குற்றவாளி மனம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும். ஏன் தானாக முன்வந்து இந்த விளக்கத்தைக் கொடுத்தார்?" ஸ்ரீவஸ்தவா கேள்விகளை அடுக்கினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரிஜ் பூஷன் சரண் சிங்
    மல்யுத்த வீரர்கள்
    டெல்லி

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    பிரிஜ் பூஷன் சரண் சிங்

    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி இந்தியா
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  மல்யுத்த வீரர்கள்
     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா

    மல்யுத்த வீரர்கள்

    மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை! கிரிக்கெட் செய்திகள்
    விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள்  இந்தியா
    ஜூன் 15க்குள் பாலியல் புகார் விசாரணை முடிவு! இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல்! அனுராக் தாக்கூர் அறிவிப்பு! டெல்லி
    இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பிற்கு ஜூலை 4இல் தேர்தல் மல்யுத்தம்

    டெல்லி

    பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை அமலாக்கத்துறை
    பாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை மக்களவை
    நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் அடிபடும் பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா! யார் அவர்? நாடாளுமன்றம்
    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025