NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம்
    ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக

    ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 08, 2024
    04:33 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது.

    பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி, ஹரியானாவில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைத் தாண்டி பல தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஜம்மு காஷ்மீரில் முன்னணியில் உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

    ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 36 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    கருத்துக் கணிப்பு

    பொய்த்துப்போன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

    முன்னதாக, ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன.

    இந்நிலையில், தற்போது நேரெதிராக நடந்து ஹரியானாவில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளதோடு, தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது.

    பாஜகவுக்கு ஹரியானாவில் ஆட்சிக்கு எதிரான வலுவான எதிர்ப்பு அலை மற்றும் ஜாட்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி இருந்தபோதிலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது.

    அதே சமயம், 2019 தேர்தலுக்கு பிறகு, தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி உதவியுடன் ஆட்சியமைக்க பாஜகவுக்கு, தற்போது தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல் முடிவு
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்
    இந்தியா

    சமீபத்திய

    சொத்து தகராறு தொடர்பாக நடிகை கௌதமிக்கு 'உயிருக்கு அச்சுறுத்தல்' என புகார்  சென்னை
    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி
    துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா துருக்கி
    போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் உச்ச நீதிமன்றம்

    தேர்தல் முடிவு

    சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா மிசோரம்
    தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்  தெலுங்கானா
    3 முக்கியத் தலைவர்கள் பங்கேற்க மறுத்ததால் INDIA கூட்டணி கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  காங்கிரஸ்
    டிசம்பர் 21இல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு மல்யுத்தம்

    தேர்தல்

     மக்களவை தேர்தல் 2024: NDA கூட்டணி அநேக இடங்களில் வெற்றி  தேர்தல் முடிவு
    ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தொடர் முன்னிலை சட்டமன்றம்
    ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் 2024: பின்னடைவை சந்திக்கும் நவீன் பட்நாயக் அரசு  ஒடிசா
    பொது தேர்தல் 2024: வோட்டுக்கு பணம் பெற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஹுவா மொய்த்ரா முன்னிலை மஹுவா மொய்த்ரா

    தேர்தல் ஆணையம்

    சென்னையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது; யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்? சென்னை
    அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு தேர்தல்
    தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது  டெல்லி
    தமிழகத்தில் தேர்தலன்று திரையரங்கு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு தமிழகம்

    இந்தியா

    இந்தியாவில் தொடர்ந்து 6வது ஆண்டாக 'இயல்பான மழை பொழிவு' பதிவாகியுள்ளது மழை
    2050ல் இந்தியா உலக வல்லரசாக மாறும்: UKவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐக்கிய இராச்சியம்
    இளைஞர்களுக்கான பிரத்யேக இன்டர்ன்ஷிப் போர்டல்; மத்திய அரசு இன்று தொடக்கம் மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண்; யார் இந்த வைஸ் அட்மிரல் ஆர்டி சரின்? விமானப்படை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025