NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "சாட்டையால் அடித்துக்கொள்ள போகிறேன்..செருப்பு அணிய மாட்டேன்": அண்ணாமலை அறிவித்த நூதன போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    "சாட்டையால் அடித்துக்கொள்ள போகிறேன்..செருப்பு அணிய மாட்டேன்": அண்ணாமலை அறிவித்த நூதன போராட்டம்
    அண்ணாமலை அறிவித்த நூதன போராட்டம்

    "சாட்டையால் அடித்துக்கொள்ள போகிறேன்..செருப்பு அணிய மாட்டேன்": அண்ணாமலை அறிவித்த நூதன போராட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 26, 2024
    04:38 pm

    செய்தி முன்னோட்டம்

    நாட்டையே உலுக்கியுள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவரிடம் விசாரணை நடத்திய நேரத்தில் அவர் தப்ப முயன்றதால், இடது கை மற்றும் கால் முறிந்தது என இன்று காலை தகவல் வெளியானது. அவர் மீது FIR-உம் பதியப்பட்டது.

    இந்த விவகாரத்தில் கைதானவர் திமுக கட்சியை சேர்ந்தவர் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை எழுப்ப, அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளன.

    இது குறித்து அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நூதன போராட்டத்தை அவர் அறிவித்தார்.

    கண்டனம்

    FIR காப்பி இணையத்தில் வெளியிட்டதை கண்டித்த அண்ணாமலை

    இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் அண்ணாமலை.

    அதில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கையின் நகல் மூலம் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாள விவரங்களை, அவரது வீட்டு முகவரியுடன் போலீஸார் பகிர்ந்துள்ளனர். இது சகிக்க முடியாத விஷயம். காவல் துறையினரின் இந்த கொடூரமான செயல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளது".

    "பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் இத்தகைய செயலில் ஈடுபட்ட நபர்கள் மீதும், மாநில காவல் துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    போராட்டம்

    ஆளும் திமுக அரசை எதிர்த்து நூதன போராட்டம்

    இந்த விவகாரத்தில் கைதான நபருக்கும் திமுகவிற்கும் சம்மந்தம் இருப்பதாக குற்றம் சாட்டிய அண்ணாமலை, "திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன். நாளை காலை 10 மணிக்கு என் வீட்டுக்கு வெளியே நின்று எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்" என பல நூதன போராட்டங்களை அறிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustNow | திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் -அண்ணாமலை#SunNews | #Annamalai pic.twitter.com/slzpvP52DW

    — Sun News (@sunnewstamil) December 26, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் -அண்ணாமலை #SunNews | #Annamalai pic.twitter.com/YTqkdAzGrK

    — Sun News (@sunnewstamil) December 26, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அண்ணாமலை
    அண்ணா பல்கலைக்கழகம்
    சென்னை
    கைது

    சமீபத்திய

    துருக்கிக்கு அடுத்த அடி; ஜனாதிபதி எர்டோகன் மகள் நிறுவனத்திற்கு இந்தியாவில் பாதுகாப்பு அனுமதி ரத்து துருக்கி
    துருக்கிக்கு 304 மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை செய்ய ஓகே சொன்னது அமெரிக்கா துருக்கி
    போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் உச்ச நீதிமன்றம்
    டிரம்ப் என்னத்த சொல்றது... இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி ஆப்பிள் நிறுவனம்

    அண்ணாமலை

    அண்ணாமலையை வைத்து திருமண விழா நடத்திய அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்  எடப்பாடி கே பழனிசாமி
    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  தேமுதிக
    திமுக பைல்ஸ் 2 - தமிழக ஆளுநரிடம் ஒப்படைத்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  ஆர்.என்.ரவி
    அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழா: கொடியசைத்து துவக்கி வைக்கிறார் அமித்ஷா அமித்ஷா

    அண்ணா பல்கலைக்கழகம்

    பொறியியல் தரவரிசை பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்  பள்ளி மாணவர்கள்
    பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை., பொறியியல்
    பொறியியல் சேர்க்கை முடிந்த பிறகும் 'ஈ ஓட்டும்' பொறியியல் கல்லூரிகள் பொறியியல்
    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டணம் 50% உயர்வு; அடுத்தாண்டு அமல் தேர்வு

    சென்னை

    சென்னை மக்களின் கவனத்திற்கு; மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம் மெட்ரோ
    வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை எச்சரிக்கை
    பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவையில் இடையூறு; சிறப்பு பேருந்துகள் இயக்கம் தெற்கு ரயில்வே
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கைது

    பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார் சவுக்கு சங்கர்
    மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு  செந்தில் பாலாஜி
    2 பேரை கொன்ற போர்ஷே விபத்து: 4 நகரங்கள், புதிய சிம் கார்டு என தப்பிக்க முயன்ற தொழிலதிபர் தந்தை விபத்து
    சினிமா பாணியில், எய்ம்ஸ் மருத்துவமனை வார்டுக்குள்ளேயே வாகனத்தை ஓட்டி வந்து கைது செய்த போலீசார் எய்ம்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025