NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வரலாறு காணாத கனமழை; ஆந்திரா, தெலுங்கானாவில் ரயில் சேவைகள் ரத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரலாறு காணாத கனமழை; ஆந்திரா, தெலுங்கானாவில் ரயில் சேவைகள் ரத்து

    வரலாறு காணாத கனமழை; ஆந்திரா, தெலுங்கானாவில் ரயில் சேவைகள் ரத்து

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 01, 2024
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால், இரு மாநிலங்களிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    சில இடங்களில் ஏரிகள் மற்றும் ஓடைகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ரயில் பாதையில் வெள்ளம் ஏற்பட்டது.

    இதனால் விஜயவாடா கோட்டத்தில் 30 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் வெள்ள நீர் காரணமாக ஒரு சில இடங்களில் ரயில் தண்டவாளம் சேதமடைந்தது.

    மஹபூபாபாத் அருகே உள்ள அயோத்தி கிராமத்தில் தொட்டி உடைந்து ரயில் பாதையில் மூழ்கியது. கேசமுத்திரம் மற்றும் இண்டிகண்ணே இடையே ரயில் பாதையும் சேதமடைந்தது.

    வெள்ளம் காரணமாக தண்டவாளத்தின் அடியில் இருந்த கான்கிரீட் அடித்து செல்லப்பட்டது. மகபூபாபாத் அருகே ரயில் தண்டவாளத்திற்கு மேல் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

    ரயில் சேவை நிறுத்தம்

    வெள்ளம் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தம்

    மஹபூபாபாத் ரயில் நிலையத்தில் சிம்ஹாத்ரி மற்றும் மச்சிலிப்பட்டினம் விரைவு ரயில்களை ரயில்வே அதிகாரிகள் நிறுத்தினர். கவுதமி, சங்கமித்ரா கங்கா-காவேரி, சார்மினார், யஷ்வந்த்பூர் விரைவு ரயில்களும் நிறுத்தப்பட்டன.

    தண்டவாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மகபூப்நகர்-விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் பாண்டிலப்பள்ளியில் நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

    ரத்து செய்யப்பட்ட ரயில்களில் விஜயவாடா-செகந்திராபாத், செகந்திராபாத்-விஜயவாடா, குண்டூர்-செகந்தராபாத், செகந்திராபாத்-சிர்பூர் காகஸ்நகர், செகந்திராபாத்-குண்டூர் ஆகியவை அடங்கும். விசாகப்பட்டினம்-நாந்தேட் மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டது. ஏலூருக்கும் செகந்திராபாத் இடையேயான அனைத்து நிறுத்தங்களும் தவிர்க்கப்பட்டன.

    விசாகப்பட்டினம்-திருப்பதி ரயில் விஜயவாடா மற்றும் செகந்திராபாத் அனைத்து நிறுத்தங்களும் தவிர்க்கப்பட்டன.

    ஆந்திரப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க, பாதுகாப்பு நடவடிக்கையாக, பல ரயில்கள் திருப்பி விடப்பட்டு ரத்து செய்யப்படுவதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    ஆந்திரா
    தெலுங்கானா
    ரயில்கள்

    சமீபத்திய

    தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை ஆய்வு மையம்
    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா
    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம் டெல்லி கேப்பிடல்ஸ்

    கனமழை

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்  குடிநீர்
    திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு  திருநெல்வேலி
    'கலைஞர் 100' நிகழ்ச்சி நடைபெறும் இடம் திடீரென மாற்றம்  கலைஞர் கருணாநிதி
    தென்மாவட்ட பள்ளிகளுக்கு ஜனவரி 2ம் தேதி அரையாண்டு தேர்வு நடத்தப்படும்-அன்பில் மகேஷ்  பள்ளிக்கல்வித்துறை

    ஆந்திரா

    ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தாக்கப்பட்ட ஆந்திர பக்தர்- சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் விளக்கம் திருச்சி
    இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல் மத்திய அரசு
    திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது திருப்பதி
    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு  ஜெகன் மோகன் ரெட்டி

    தெலுங்கானா

    சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது தேர்தல்
    சொந்த ஊரிலேயே தோல்வி முகத்தில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்; பிஆர்எஸ் அதிர்ச்சி சந்திரசேகர் ராவ்
    தேர்தல் முடிவுகள்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை  தேர்தல்
    டிசம்பர் 6ம் தேதி நடக்கிறது 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் காங்கிரஸ்

    ரயில்கள்

    ஆந்திரா ரயில் விபத்து: 13 பேர் மரணம், 40க்கும் மேற்பட்டோர் காயம் எனத்தகவல் விபத்து
    சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்றதால் தான் ஆந்திர ரயில் விபத்து ஏற்பட்டது ஆந்திரா
    கோவை மதுக்கரையில் ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் கேரளா
    'பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்களை' மேம்படுத்தத் திட்டமிடும் இந்திய ரயில்வே இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025