NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க உத்தரவு 
    கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க உத்தரவு

    கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்க உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Nov 09, 2023
    06:19 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவரை 7 சீனியர் மாணவர்கள் ராகிங் செய்த விவகாரத்தில் அவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் தடுப்பு குழுவினை கட்டாயம் அமைக்கவேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் கீதா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில், கல்லூரியில் மாணவர்கள் இடையே ராகிங் நடக்காதபடி, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி ராகிங் நடப்பதற்கு முன்னரே எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

    கல்லூரிகளில் கட்டாயம் ராகிங் தடுப்புக்குழு அமைக்க வேண்டும்.

    ராகிங் குறித்த புகார்களை உடனடியாக தெரிவிக்க ஆசிரியர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்டவை அறிவிப்பு பலகையில் வைத்திருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    குழு 

    ஆய்வு மேற்கொண்டு ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவு 

    மேலும், ராகிங் கொடுமையினை முழுமையாக ஒழிக்க ராகிங் புகார் பெட்டி, ஆலோசனைப்பெட்டி உள்ளிட்டவைகளை வைப்பதோடு, அதில் வரும் புகார்கள் குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள் ஒன்றாகக்கூடி ஆலோசித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, கடந்த 2019ம்-ஆண்டு அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மகாராஷ்டிரா அரசின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள ராகிங் தடுப்புக்குழுவில் கல்லூரி தலைவர், துறைசார்ந்தத்தலைவர்கள், காவல்துறை, செய்தித்துறை, பொதுத்துறையின் முக்கிய தலைவர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இருப்பது போன்று தமிழ்நாடு கல்லூரிகளிலும் அமைக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோல் அடுத்த ஒரு வாரத்திற்குள் இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இருந்து அறிக்கை அனுப்பப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மகாராஷ்டிரா
    கல்லூரி
    கல்வி

    சமீபத்திய

    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்

    தமிழ்நாடு

    காவிரி பிரச்சனை: தமிழகத்திற்கு தினமும் 2,600 கன அடி நீர் திறந்துவிட உத்தரவு  கர்நாடகா
    டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி  பள்ளிக்கல்வித்துறை
    மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி? - எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார வாரியம் தொழில்நுட்பம்
    12 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  புதுச்சேரி

    மகாராஷ்டிரா

    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  வங்கிக் கணக்கு
    மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும் இந்தியா
    ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்! ஏஆர் ரஹ்மான்
    மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார்  இந்தியா

    கல்லூரி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    கல்லூரிகளில் சேர்ந்து செப்.30க்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும்: UGC யுஜிசி
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  கோவை
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி

    கல்வி

    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  ஐஐடி
    தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா அமித்ஷா
    இணையத்தில் வைரலான வீடியோ, ஆசிரியரை பணிநீக்கம் செய்த அன்அகாடமி.. என்ன நடக்கிறது? ட்விட்டர்
    அமெரிக்காவில் பைஜூஸ் வழக்கில் புதிய திருப்பம்.. 533 பில்லியன் டாலர்களை மறைத்திருக்கிறதா பைஜூஸ்? வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025