NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம்
    ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம் - ஜெகன் மோகன் ரெட்டி

    நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம்

    எழுதியவர் Nivetha P
    Sep 21, 2023
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திரா மாநிலம் கடந்த 2014ம்ஆண்டில் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது.

    அப்போது ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை ஆந்திராவின் தலைநகராக அறிவித்தார் என்று கூறப்படுகிறது.

    அதற்கான பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணா நதிநீர் அருகேயுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

    அதன்பின்னர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆந்திரா முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதி சட்டப்பேரவை நகரமாக செயல்படும் என்று அறிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து அவர் விசாகபட்டினத்தை நிர்வாக தலைநகரமாகவும், கர்னூலை சட்டத்தலைநகராகவும் அறிவித்தார்.

    மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களும் சமமான வளர்ச்சியினை அடையவே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    இதனிடையே, ஆந்திராவில் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று(செப்.,21)துவக்கிய நிலையில், நேற்று(செப்.,20)நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு உறுதியாக அறிவிக்கப்பட்டது.

    முதல்வர் 

    தலைநகரை மாற்றும் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது 

    இந்நிலையில் தசரா பண்டிகையான நவம்பர் 2ம் தேதி முதல் விசாகப்பட்டினம் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

    மேலும், முதல்வரின் அலுவலகம் விசாகபட்டினத்திற்கு மாற்றப்படவுள்ளது என்றும், அமைச்சர்கள் அங்கிருந்து பணியாற்ற தயாராக இருக்கும் படியும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் தலைமை செயலகம் அமைக்கப்படும் என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமராவதியை தலைநகராக தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இதில் அமராவதியையே தலைநகராக தொடரும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி இதுகுறித்து மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டது.

    தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜெகன் மோகன் ரெட்டி
    ஆந்திரா
    தெலுங்கானா
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஜெகன் மோகன் ரெட்டி

    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா
    ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி  ஆந்திரா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  இந்தியா

    ஆந்திரா

    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா
    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை இந்தியா
    ஆந்திரா கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து-அச்சத்தில் பயணிகள் ரயில்கள்

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா
    ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ உடற்பயிற்சி
    21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் அக்னி பரீட்சை: ஆனால் ஒரு டிவிஸ்ட்! மாநிலங்கள்

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025