NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள் 
    YSRCP கட்சியும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள் 

    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2023
    10:56 am

    செய்தி முன்னோட்டம்

    புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதால், 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் மற்றும் YSRCP ஆகிய இரு கட்சிகளும் திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன.

    BJD கட்சியின் எம்.பி.க்கள் திறப்பு விழாவில் பங்கேற்பதை அறிவித்த BJD செய்தித் தொடர்பாளர் லெனின் மொஹந்தி , ஜனநாயகத்தின் சின்னமான நாடாளுமன்றம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், அதன் அதிகாரமும் அந்தஸ்தும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    "நாடாளுமன்றம் போன்ற அரசியலமைப்பு நிறுவனம் தனது புனிதம் மற்றும் மரியாதையை பாதிக்கக்கூடிய எந்தவொரு பிரச்சினைக்கும் மேலாக இருக்க வேண்டும் என்று BJD நம்புகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஆகஸ்ட் மாத கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்." என்றும் BJD கூறியுள்ளது.

    details

     ஆந்திர பிரதேச முதல்வரின் கட்சி திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறது 

    தற்போது, BJD கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மக்களவையிலும் எட்டு எம்.பி.க்கள் மாநிலங்களவையிலும் உள்ளனர்.

    "இந்தியாவின் குடியரசுத் தலைவர் இந்திய அரசின் தலைவர் ஆவார். நாடாளுமன்றம் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இரண்டு அமைப்புகளும் இந்திய ஜனநாயகத்தின் சின்னங்கள் ஆகும். இரண்டுமே இந்திய அரசியலமைப்பிலிருந்து தங்கள் அதிகாரத்தைப் பெறுகின்றன" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியான YSRCP கட்சியும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

    ஜூன் 2014-ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய நிதிப் பகிர்வுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நாடாளுமன்றம்
    நரேந்திர மோடி
    ஜெகன் மோகன் ரெட்டி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    '2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த அவசரமும் இல்லை': RBI கவர்னர்  ரிசர்வ் வங்கி
    மகளிர் ஹாக்கி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்தது இந்தியா ஹாக்கி போட்டி
    மோடி ஆவணப்படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு நோட்டீஸ் மத்திய அரசு
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது  கலவரம்

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    நரேந்திர மோடி

    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா
    ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்!  எலான் மஸ்க்
    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி இந்தியா
    மீண்டும் பிபிசி நிறுவனத்தில் சோதனை: அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை  இந்தியா

    ஜெகன் மோகன் ரெட்டி

    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா
    ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி  ஆந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025