NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள் 
    இந்தியா

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள் 

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள் 
    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2023, 10:56 am 1 நிமிட வாசிப்பு
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள் 
    YSRCP கட்சியும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

    புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதால், 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் மற்றும் YSRCP ஆகிய இரு கட்சிகளும் திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன. BJD கட்சியின் எம்.பி.க்கள் திறப்பு விழாவில் பங்கேற்பதை அறிவித்த BJD செய்தித் தொடர்பாளர் லெனின் மொஹந்தி , ஜனநாயகத்தின் சின்னமான நாடாளுமன்றம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், அதன் அதிகாரமும் அந்தஸ்தும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். "நாடாளுமன்றம் போன்ற அரசியலமைப்பு நிறுவனம் தனது புனிதம் மற்றும் மரியாதையை பாதிக்கக்கூடிய எந்தவொரு பிரச்சினைக்கும் மேலாக இருக்க வேண்டும் என்று BJD நம்புகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஆகஸ்ட் மாத கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்." என்றும் BJD கூறியுள்ளது.

     ஆந்திர பிரதேச முதல்வரின் கட்சி திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறது 

    தற்போது, BJD கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மக்களவையிலும் எட்டு எம்.பி.க்கள் மாநிலங்களவையிலும் உள்ளனர். "இந்தியாவின் குடியரசுத் தலைவர் இந்திய அரசின் தலைவர் ஆவார். நாடாளுமன்றம் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இரண்டு அமைப்புகளும் இந்திய ஜனநாயகத்தின் சின்னங்கள் ஆகும். இரண்டுமே இந்திய அரசியலமைப்பிலிருந்து தங்கள் அதிகாரத்தைப் பெறுகின்றன" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியான YSRCP கட்சியும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 2014-ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய நிதிப் பகிர்வுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    நரேந்திர மோடி
    பாஜக
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல் யூடியூபர்
    ஹீரோ பிரபாஸுக்கு வில்லனாக மாறிய உலகநாயகன் கமலஹாசன் கமல்ஹாசன்
    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  கேரளா
    'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன் ஐபிஎல்

    இந்தியா

    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் ஜப்பான்
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு மணிப்பூர்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  டெல்லி
    மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு உதவிய LeT தலைவர், பாகிஸ்தான் சிறையில் உயிரிழந்தார்  மும்பை

    நரேந்திர மோடி

     9 ஆண்டுகால ஆட்சி நிறைவு: பிரதமர் மோடி ட்வீட் இந்தியா
    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி  இந்தியா
    புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ  இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் இந்தியா

    பாஜக

    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு புதிய பெயர் வைக்கப்படலாம்  இந்தியா
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா

    நாடாளுமன்றம்

    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா இந்தியா
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023