NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு 
    குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று வெளியாகியுள்ளன.

    ஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 14, 2023
    01:13 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஜூலை மாதம், கேரளாவின் ஆலுவாவை சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்ப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலம் ஆலுவா மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த ஜூலை 28ஆம் தேதி திடீரென மாயமானார்.

    எங்கு தேடியும் தங்களது குழந்தை கிடைக்காததால் அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதனையடுத்து இந்த பிரச்சனையை விசாரிக்க தொடங்கிய போலீசார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதன் மூலம், காணாமல் போன குழந்தையை அப்பகுதியில் வசிக்கும் பீகாரை சேர்ந்த ஒரு புலம்பெயர் தொழிலாளி அழைத்து சென்றது தெரிய வந்தது.

    ட்ஜ்வ்ஜ்ஞ

    30 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசார் 

    இந்நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், புலம்பெயர் தொழிலாளி அஸ்பாக் ஆலமை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அந்த 5 வயது சிறுமியை அஸ்பாக் ஆலம், கடத்தி, பலாத்காரம் செய்து, கொலை செய்துவிட்டு அந்த சிறுமியின் உடலை குப்பை தொட்டியில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து, கொலை, பலாத்காரம் உட்பட 16 பிரிவுகளின் கீழ் அஸ்பாக் ஆலம் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.

    சம்பவம் நடந்த 30 நாட்களில் அஸ்பாக் ஆலமுக்கு எதிராக 800 பக்க குற்றப்பத்திரிக்கை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    110 நாட்களுக்குள் இந்த வழக்கில் அஸ்பாக் ஆலம் தான் குற்றவாளி என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று வெளியாகியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    பலாத்காரம்
    கொலை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கேரளா

    இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் - கேரளாவில் திறப்பு சுற்றுலா
    கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி  இந்தியா
    கேரளத்தில் பயங்கரமான நிபா வைரஸால் பரபரப்பு: 7 கிராமங்களில் பள்ளிகள், வங்கிகள் மூடல்  கோழிக்கோடு
    கேரளாவில் நிபா வைரஸ்: 5 பேருக்கு பாதிப்பு உறுதி, தொடர்பு பட்டியலில் 700 பேர் நிபா வைரஸ்

    பலாத்காரம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    மணிப்பூர் வன்முறை கும்பலிடம் விட்டு தப்பியோடிய காவல்துறை - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி  கொலை
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் விவகாரம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எம்.பி.கனிமொழி பேச்சு  கனிமொழி

    கொலை

    தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்  உத்தரப்பிரதேசம்
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கைது
    கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம்  கேரளா
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025