NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோளை அடுத்து முடிவுக்கு வந்த 11 நாள் மருத்துவர் போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோளை அடுத்து முடிவுக்கு வந்த 11 நாள் மருத்துவர் போராட்டம்
    மருத்துவர்கள் போராட்டம்

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோளை அடுத்து முடிவுக்கு வந்த 11 நாள் மருத்துவர் போராட்டம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 22, 2024
    05:46 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கம் (ஆர்டிஏ) தங்களது 11 நாள் வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.

    இந்த முடிவு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வேண்டுகோள் மற்றும் வழக்கு தொடர்பான வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

    "கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டதற்கும், நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த பெரிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை நாங்கள் மனதார பாராட்டுகிறோம்" என்று ஆர்டிஏ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர்களை பணியைத் தொடருமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டதுடன், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆர்டிஏ எய்ம்ஸ் போராட்டம் வாபஸ்

    We are resuming duties following the Supreme Court’s appeal and assurances and intervention in the RG Kar incident and safety for doctors . We commend the Court's action and call for adherence to its directives. Patient care remains our top priority. @MoHFW_INDIA @aiims_newdelhi pic.twitter.com/lA5YQdKwoP

    — RDAAIIMS DELHI (@AIIMSRDA) August 22, 2024

    போராட்டம் வாபஸ்

    ஆர்எம்எல் மருத்துவமனையின் ரெசிடென்ட் மருத்துவர்களின் வேலை நிறுத்தமும் வாபஸ்

    எய்ம்ஸ் ஆர்டிஏவின் முடிவைப் பின்பற்றி, ராம் மனோகர் லோஹியா (ஆர்எம்எல்) மருத்துவமனையின் ரெசிடென்ட் மருத்துவர்களும் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

    முன்னதாக, போராட்டத்தின் போது, ​​நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று காலை, வேலை நிறுத்தம் காரணமாக ஆஸ்பத்திரியில் ஊழியர்கள் குறைக்கப்பட்டதால் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஆர்எம்எல் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அஜய் சுக்லா கூறுகையில், தொலைதூர இடங்களில் இருந்து நோயாளிகள் வருவதால் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். எனினும், அவசர சிகிச்சை பிரிவுகள் எந்தவித சிக்கலும் இல்லாமல் இயங்கியதாகத் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எய்ம்ஸ்
    போராட்டம்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    எய்ம்ஸ்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து  டெல்லி
    கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மதுரை
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு  மதுரை
    மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள்  டெல்லி

    போராட்டம்

    அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம் பாஜக
    எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவன் அடித்து கொலை - ஜார்கண்ட் மாநிலத்தில் நேர்ந்த கொடூரம் கைது
    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  மதுரை
    தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டங்கள்: மும்பை-பெங்களூரு போக்குவரத்து பாதிப்பு, ரயில்கள் நிறுத்தம்  மும்பை

    உச்ச நீதிமன்றம்

    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை என்று உச்ச நீதிமன்றம் அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி அரவிந்த் கெஜ்ரிவால்
    அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? அரவிந்த் கெஜ்ரிவால்
     "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025