NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள் 
    விஸ்டாரா ஏர்லைன் விமானத்தில்(UK-814) நேற்று இந்த சம்பவம் நடந்தது.

    மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 28, 2023
    02:52 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூரிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் சுவாசிப்பதை நிறுத்திய இரண்டு வயது பெண் குழந்தைக்கு, அதே விமானத்தில் பயணித்த ஐந்து மருத்துவர்கள் அவசர மருத்துவ சிகிச்சை அளித்ததனால் அந்த குழந்தை உயிர் பிழைத்தது.

    அந்த குழந்தைக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    விஸ்டாரா ஏர்லைன் விமானத்தில்(UK-814) நேற்று இந்த சம்பவம் நடந்தது.

    அந்த விமானத்தில், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் ஐந்து மூத்த மருத்துவர்கள், இந்திய வாஸ்குலர் மற்றும் இண்டர்வென்ஷனல் ரேடியாலஜி(ISVIR) நிறுவனத்திலிருந்து டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    நடு வானில் அந்த குழந்தை மூச்சு விடுவதை நிறுத்தியதும், உடனடியாக விமானம் நாக்பூருக்கு திருப்பப்பட்டது.

    டிஜிகிவ்ன்

    விமானத்தில் வைத்து குழந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பு 

    விமானத்தில் இருந்த டாக்டர்கள், விமானப் பணியாளர்களின் அவசர அழைப்புக்கு உடனடியாக பதிலளித்தனர்.

    அந்த குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து போது, அந்த குழந்தைக்கு, "நாடித் துடிப்பு இல்லை. அந்த குழந்தை சுவாசிக்கவும் இல்லை. அதன் மூட்டுகள் குளிர்ச்சியாக இருந்தன. மேலும் குழந்தையின் உதடுகளும் விரல்களும் நிறம் மாறி இருந்தன."

    இதனையடுத்து, விமானம் நாக்பூருக்கு பயணித்து கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்த மருத்துவ வசதியை வைத்து குழந்தைக்கு CPR அளிக்கப்பட்டது.

    அதனையடுத்து, குழந்தைக்கு செயற்கையான சுவாச காற்றுப்பாதை பொருத்தப்பட்டது. இதனால், குழந்தையின் உடல் மீண்டும் இயங்க தொடங்கியது.

    ஆனால், அதற்குள் அந்த குழந்தைக்கு மீண்டும் ஒரு மாரடைப்பு ஏற்பட்டது. அதை AED என்ற கருவி கொண்டு சரி செய்த மருத்துவர்கள், அந்த குழந்தையை பிழைக்க வைத்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ட்விட்டர் பதிவு 

    #Always available #AIIMSParivar
    While returning from ISVIR- on board Bangalore to Delhi flight today evening, in Vistara Airline flight UK-814- A distress call was announced

    It was a 2 year old cyanotic female child who was operated outside for intracardiac repair , was… pic.twitter.com/crDwb1MsFM

    — AIIMS, New Delhi (@aiims_newdelhi) August 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எய்ம்ஸ்
    டெல்லி
    பெங்களூர்

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    எய்ம்ஸ்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து  டெல்லி
    கடன் பெற்று கட்டப்படும் மதுரை AIIMS: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மதுரை
    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி அடுத்தகட்டத்துக்கு நகர்வு  மதுரை

    டெல்லி

    டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு  அரவிந்த் கெஜ்ரிவால்
    உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்
    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  இந்தியா
    ராணுவம், கடற்படையின் உதவியோடு யமுனை வெள்ளத்தை தடுக்க முயற்சி இந்தியா

    பெங்களூர்

    கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்? கர்நாடகா
    FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு! சாலை பாதுகாப்பு விதிகள்
    வாக்களிக்காமல் பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை: இன்போசிஸ் சுதா மூர்த்தி கர்நாடகா
    கர்நாடகா: நடத்துனரின் உதவியுடன் ஓடும் பேருந்திலேயே குழந்தை பிரசவித்த கர்ப்பிணி!  பயணம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025