NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம்
    மணிப்பூரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

    'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Aug 01, 2023
    05:11 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் விசாரணையின் மந்தமான வேகம் குறித்து இன்று கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், "மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது" என்று கூறியுள்ளது.

    மணிப்பூரில் மே-3ஆம் தேதி முதல் இனக்கலவரம் நடந்து வருகிறது. இதனால், இதுவரை 160 பேர் பலியாகியுள்ளனர், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

    மணிப்பூரில் நடந்த வன்முறைகளின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட பல FIRகள் பதிவு செய்யப்பட்டது.

    இது போன்ற சம்பவங்கள் குறித்து இன்று விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "மாநில காவல்துறை கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர். சட்ட ஒழுங்கு முற்றிலும் இல்லை. சட்ட ஒழுங்கு கருவிகளால் மக்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால், குடிமக்களின் கதி என்ன?" என்று கேள்வி எழுப்பியது.

    கிக்

    இதுவரை, மணிப்பூரில் 6,523 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளது 

    நிர்வாணமாக பெண்கள் ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வழக்கு குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மணிப்பூர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அனைத்து FIRகளையும் சிபிஐ தலையில் சுமத்த முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், அரசுப் பணிகள், இழப்பீடு, பணி மறுசீரமைப்பு, விசாரணை மற்றும் அறிக்கைப் பதிவு ஆகியவற்றை மேற்பார்வையிட முன்னாள் நீதிபதிகள் குழுவை அமைப்பது குறித்து பரிசீலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதுவரை, மணிப்பூரில் 6,523 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    அவற்றில், 11 FIRகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பானவையாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    உச்ச நீதிமன்றம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மணிப்பூர்

    "மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்": வீராங்கனை மீராபாய் சானு வேண்டுகோள்  பளுதூக்குதல்
    மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் என் இதயம் நொறுங்கிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்  முதல் அமைச்சர்
    "மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே வெட்கக்கேடு; குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    மணிப்பூர் பழங்குடியின பெண்கள் கற்பழிப்பு விவகாரம்: ஒருவர் கைது  கைது

    உச்ச நீதிமன்றம்

    "நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான்
    ஒரே பாலின திருமணங்கள்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    இம்ரான் கான் விடுவிப்பு: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்  இந்தியா

    காவல்துறை

    மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு புதிய சீருடைகள் அறிவிப்பு  காவல்துறை
    நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 4 எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் கைது  நீட் தேர்வு
    மத்தியப் பிரதேசம்: பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது  மத்திய பிரதேசம்
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு

    காவல்துறை

    வேங்கைவயல் விவகாரம் - மறுப்பு தெரிவித்த 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிப்பு  வேங்கை வயல்
    மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து மெக்சிகோ
    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி  கைது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025