NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 
    இதுவரை இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 31, 2023
    03:44 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுவரை இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி கடந்த வாரம் மத்திய அரசு உத்தரவிட்டது.

    அதன் பிறகு, சிபிஐ முறையாக இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு FIR பதிவு செய்தது.

    இந்நிலையில், இன்று இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

    டுயோ

    வன்முறையின் போது குற்றவாளிகளுக்கு ஒத்துழைத்த காவல்துறை

    விசாரணையின் போது, "மற்றொரு வீடியோ வெளிச்சத்த்திற்கு வந்தால்தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது இல்லை." என்று கூறிய தலைமை நீதிபதி, "மணிப்பூரில் வன்முறைகள் தொடங்கிய மே-3ஆம் தேதியில் இருந்து பதிவு செய்யப்பட்ட 6000 FIRகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனை?" என்று அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த மத்திய அரசு, சரியான எண்ணிக்கைகள் தற்போது தங்கள் வசம் இல்லை என்று தெரிவித்தது.

    பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வன்முறையின் போது குற்றவாளிகளுக்கு காவல்துறை ஒத்துழைத்தாக குற்றம்சாட்டினார்.

    சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையை அணுகியதாகவும், ஆனால் காவல்துறையினர் பெண்களை குற்றவாளிகளிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    த்வஜன்வ்க்

    "உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும்": கபில் சிபல்

    மேலும் பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இது குறித்த சிபிஐ விசாரணையை விரும்பவில்லை. மேலும், இந்த வழக்கு மாநிலத்திற்குள் விசாரிக்கப்படுவதையும் மனுதாரர்கள் விரும்பவில்லை" என்று கூறினார்.

    காவல்துறை மீது மனுதாரர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் அவர் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

    அதன் பிறகு பேசிய மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், "தப்பிப்பிழைத்தவர்கள் அதிர்ச்சியடைந்து பயமுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ குழுவிடம் உண்மையைச் சொல்வார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. " என்று கூறினார்.

    அதனால், இதை விசாரிக்க சிவில் சமூகத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டு கொண்டார்.

    ஜிவ்ல்க்கே

    'இத்தனை நாட்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது': உச்ச நீதிமன்றம் 

    இதற்கிடையில், மத்திய அரசை கடுமையாக கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், "மே 4ஆம் தேதி சம்பவம் நடந்தது. ஜீரோ FIR மே 18ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. ஜூன் மாதம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அது மாற்றப்பட்டது. ஜூலை 19ஆம் தேதி வீடியோ வைரலாகப் பரவியது. ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு வந்த பிறகுதான் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது" என்று கூறியது.

    இதனையடுத்து, மத்திய அரசு சார்பில் பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்தாலும் மத்திய அரசுக்கு ஆட்சேபனை இல்லை" என்று தெரிவித்தார்.

    சிஜுக்

     SIT விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை 

    மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுக்கு எதிராக பாதிக்கப்பட்ட இரு பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டு கொண்டுள்ளனர். அதனால், நீதிமன்ற ஆவணங்களில் இரண்டு பெண்களின் பெயரும் "X" மற்றும் "Y " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், ஐ.ஜி அந்தஸ்து கொண்ட போலீஸ் அதிகாரி தலைமையில் சுயேச்சையாக SIT விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணையை மணிப்பூர் மாநிலத்துக்கு வெளியே மாற்ற வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    மத்திய அரசு
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: 2 மாதகாலமாக தொடரும் 'இன்டர்நெட்' தடையை நீக்க உத்தரவு  கலவரம்
    மணிப்பூர் சட்டம் ஒழுங்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு உச்ச நீதிமன்றம்
    "மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும்": வீராங்கனை மீராபாய் சானு வேண்டுகோள்  பளுதூக்குதல்
    மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் என் இதயம் நொறுங்கிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்  முதல் அமைச்சர்

    மத்திய அரசு

    திருப்பதி தேவஸ்தான கோரிக்கையினை ஏற்க மறுத்த மத்திய அரசு  திருப்பதி
    பான்-ஆதார் இணைப்புக்கான காலக்கெடு முடிந்தது, இனி என்ன? பான் கார்டு
    காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு  கனடா
    வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு செயற்கை நுண்ணறிவு

    உச்ச நீதிமன்றம்

    ஏக்நாத் ஷிண்டே-உத்தவ் தாக்கரே பிரச்சனை: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது  இந்தியா
    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை இலங்கை
    "நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான்
    ஒரே பாலின திருமணங்கள்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025