NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம்
    ராஜ்யசபாவின் இளம் உறுப்பினர்களில் சத்தாவும் ஒருவர் ஆவார்.

    எம்பி ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக நியமனம்

    எழுதியவர் Sindhuja SM
    Dec 16, 2023
    05:10 pm

    செய்தி முன்னோட்டம்

    சஞ்சய் சிங்குக்கு பதிலாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா தலைவராக எம்பி ராகவ் சத்தாவை அக்கட்சி நியமித்துள்ளது.

    "உடல்நலப் பிரச்சனைகள்" காரணமாக தலைவர் சஞ்சய் சிங் தற்போது தனது பதவியில் இல்லாததால், இனிமேல் ஆம் ஆத்மியின் ராஜ்யசபா தலைவராக ராகவ் சத்தா இருப்பார் என்று ராஜ்யசபா தலைவருக்கு எழுதிய கடிதத்தில் அக்கட்சி கூறியுள்ளது.

    ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் தற்போது டெல்லி மதுக் கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சி அனுப்பிய கடிதம் தங்களுக்கு கிடைத்ததாக ராஜ்யசபா செயலக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

    திலகவா

    இளம் உறுப்பினரான சத்தா ராஜ்யசபா தலைவராக நியமனம் 

    ஆம் ஆத்மியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அந்த கடிதம் தற்போது ராஜ்யசபா பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ராஜ்யசபாவின் இளம் உறுப்பினர்களில் சத்தாவும் ஒருவர் ஆவார்.

    ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது ராஜ்யசபாவில் மொத்தம் 10 எம்பிக்கள் உள்ளனர்.

    பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சிக்கு தான் ராஜ்யசபாவில் அதிக பலம் உள்ளது.

    டெல்லி அரசு அதிகாரிகள் மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசிற்கு வழங்கும் டெல்லி சேவைகள் ஆணை தொடர்பான பிரச்சனையில் ராஜ்யசபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராகவ் சத்தாவின் இடைநீக்கம், கடந்த வாரம் தான் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    மாநிலங்களவை
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்
    மனைவி பிரிந்ததால் விரக்தி; கர்நாடகாவில் திருமணம் செய்து வைத்த தரகரை கொலை செய்த கணவர் கர்நாடகா
    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி
    அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க தூக்கம்

    டெல்லி

    தீபாவளியை அடுத்து டெல்லி காற்று மாசுபாடு கடுமையானதாக மாறியது  காற்று மாசுபாடு
    இந்திய விருந்தோம்பல் துறையின் முன்னோடி, ஓபராய் குழுமத்தின் தலைவர் பிஆர்எஸ் ஓபராய் காலமானார் ஹோட்டல்
    டெல்லி மாசுக்காற்று: மருத்துவர்கள் பரிந்துரைப்படி, ஜெய்ப்பூருக்கு செல்கிறார் சோனியா காந்தி சோனியா காந்தி
    ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை நடிகைகள்

    மாநிலங்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025