Page Loader
கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு 

கர்நாடகா: ஹோட்டல் அறைக்குள் புகுந்து இரு வேறு மதத்தை சேர்ந்த ஜோடியை தாக்கிய 6 பேரால் பரபரப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jan 11, 2024
01:51 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவில் உள்ள ஒரு லாட்ஜின் அறைக்குள் புகுந்த ஆறு பேர், ஒரு ஜோடியை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இரு வேறு மதங்களை சேர்ந்த ஜோடிகளுக்கு எதிரான தங்களது கண்ணோட்டத்தை பதிவு செய்ய தாக்குதல்காரர்களே அந்த வீடியோக்களை பதிவு செய்துள்ளனர். ஒரு ஹோட்டல் அறைக்குள் நுழையும் கும்பல், அங்கிருக்கும் பர்தா அணிந்த பெண்ணை குறிவைத்து தாக்குவதை வைரலாகி வரும் வீடியோவில் நன்றாக காண முடிகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் ஆவார். அவர் வேறு மதத்தை சேர்ந்த தனது கள்ள காதலனுடன் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

கிகிஜிஸ்ட்

 கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்ணை அவமானப்படுத்திய பிரிவுகளுக்கு கீழ் வழக்கு பதிவு 

அந்த ஜோடியை சரமாரியாக தாக்கிய 7 பேர் மீது பலாத்கார குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனையடுத்து, அந்த தம்பதியினர் ஹானகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆறு ஆண்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். "ஜனவரி 7 அன்று ஹானகலில் உள்ள நல்ஹாரா கிராஸில் தாக்குதல் நடத்தப்பட்டது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்ணை அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆறு பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற நான்கு பேரையும் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்," என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.