NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி 
    நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி

    நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி 

    எழுதியவர் Nivetha P
    Dec 21, 2023
    07:00 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகை கௌதமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பாஜக.,கட்சி பிரமுகரான அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடாக அபகரித்து கொண்டதாக புகாரளித்திருந்தார்.

    அந்த புகாரில் கௌதமி தான் கொடுத்த பவர் ஆஃப் அட்டர்னி பத்திரம் கொண்டு தனது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்றும்,

    இந்த மோசடியினை செய்தது அழகப்பன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தார்.

    கௌதமி கொடுத்த இப்புகாரை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் அழகப்பன் மற்றும் அவரது மனைவி உள்பட அவர்களது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சொத்து விவகாரம் காஞ்சிபுரம் மத்திய குற்றப்பிரிவிலும், சென்னையிலுள்ள சொத்து விவகாரம் சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் என தனித்தனியே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வழக்கு 

    டிரான்ஸிட் வாரண்ட்டி பெற்று அவர்களை கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பணி நடக்கிறது 

    மேலும் இது தொடர்பாக அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியம்மாளுக்கு லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.

    இதற்கிடையே இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த நிலையில், அவர்களது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதன் பின்னர், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சைபர் க்ரைம் அதிகாரிகளின் உதவியோடு காவல்துறை தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இந்நிலையில், கேரளா, திருச்சூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அழகப்பன், விசாலாட்சி உள்ளிட்ட 6 பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தற்போது கைது செய்துள்ளது.

    டிரான்ஸிட் வாரண்ட்டி பெற்று அவர்களை கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பணி தற்போது நடந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    காவல்துறை
    காவல்துறை
    சென்னை

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    கைது

    ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை  இலங்கை
    மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல் குஜராத்
    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  திருமணம்
    கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளியை அடையாளம் காண நடத்தப்பட்ட அணிவகுப்பு கேரளா

    காவல்துறை

    இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் தமிழ் படங்களின் தொகுப்பு நயன்தாரா
    திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக புது மணப்பெண் உயிரிழப்பு திருமணம்
    கோவையில் பிரபல நகைக்கடை கொள்ளை சம்பவம் - குற்றவாளி அடையாளம் காணப்பட்டதாக தகவல்  கோவை
    பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம்  பெங்களூர்

    காவல்துறை

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த என்கவுன்டரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கொல்லப்பட்டார் ஜம்மு காஷ்மீர்
    எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம் எம்பிபிஎஸ்
    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது  அமெரிக்கா
    அரசு வேலை கிடைத்த இளைஞருக்கு 24 மணிநேரத்தில் துப்பாக்கி முனையில் திருமணம் - வினோத நிகழ்வு  பீகார்

    சென்னை

    கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு
    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் துவங்கியது செங்கல்பட்டு
    சென்னைக்கு மீண்டும் மழையா? தமிழ்நாடு வெதர்மென் கூறுகிறார்  மழை
    மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025