
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயம்
செய்தி முன்னோட்டம்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைசரான் பள்ளத்தாக்கில் இயற்கை அழகை ரசிக்க குதிரைச் சவாரியில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மீதும் அங்கிருந்த கடையில் உணவருந்தி கொண்டிருந்தவர்கள் மீதும், பிற்பகல் 2.30 மணியளவில் ராணுவ சீருடை அணிந்த பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கியால் கண்மூடித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் இந்திய கடற்படை அதிகாரி ஒருவர், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.
விபரம்
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விபரம்
நேற்று நடந்த தாக்குதலில் உயிரழந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர்:
மஞ்சுநாத் (கர்நாடகா)
2. வினய் நர்வால் (ஹரியானா)
3. சுபம் திவேதி (உத்தரப் பிரதேசம்)
4. சந்தீப் (நேபாளம்)
5. உத்வானி பிரதீப் (அமீரகம்)
6. அதுல் ஸ்ரீகாந்த் (மகாராஷ்டிரா)
7. சையது உசேன் (காஷ்மீர்)
8. ஷிவம் மோகா (கர்நாடகா) உள்ளிட்டவர்கள்.
இவர்களோடு, தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்கள்- மருத்துவர் பரமேஸ்வரன் (31), சந்திரு (83) மற்றும் பாலச்சந்திரா (57).
இவர்கள் அனந்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் படுகாயம் அடைந்த 12 பேர் பஹல்காம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.