NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ்
    ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள், டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ்

    எழுதியவர் Srinath r
    Nov 30, 2023
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து, 5 மாநில சட்டமன்றங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.

    டிசம்பர் 3ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், 5 மாநிலங்களுக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

    அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகிறது.

    மத்திய பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்?

    230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், பெரும்பான்மைக்கு 116 தொகுதிகள் தேவை. பாஜக இங்கு ஆளும் கட்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜன் கி பாத் மற்றும் டிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட், காங்கிரசுக்கு குறுகிய வெற்றியை கணித்திருக்கும் நிலையில், ரிபப்ளிக் டிவி- மேட்ரிஸ் கருத்துக்கணிப்பு பாஜகவிற்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளது.

    2nd card

    ராஜஸ்தானில் ஆட்சியை தக்கவைக்குமா காங்கிரஸ்?

    கடந்த 30 ஆண்டுகளாக ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த ராஜஸ்தான், இந்த தேர்தலிலும் அவ்வாறே வாக்களித்து இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    199 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில், 100 தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சி அமைக்கலாம்.

    ஜன் கி பாத், டைம்ஸ் நவ்-ETG, டிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட் ஆகியவை பாஜக பெரும்பான்மை பெறும் என கணித்துள்ளனர்.

    இம்மாநிலத்தில் உதிரி கட்சிகள் அதிகபட்சமாக 21 தொகுதிகள் வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சி அமைக்க அவர்களின் பங்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு தேவைப்படும்.

    3rd card

    சத்தீஸ்கர் மாநிலத்தை தக்கவைக்கும் காங்கிரஸ்

    ஏபிபி செய்திகள்- சீ ஓட்டர், இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா, இந்தியா டிவி- சிஎன்எக்ஸ், ஜன் கி பாத், நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா,

    ரிபப்ளிக் டிவி- மேட்ரிஸ், டிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட் ஆகிய அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரஸ் அதிகபட்சமாக 57 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா கணித்துள்ளது.

    4th card

    மிசோரம் மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கிறார்கள்?

    மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில்,

    ஜன் கி பாத் ஜோரம் மக்கள் இயக்கமும், இந்தியா டிவி- சிஎன்எக்ஸ், மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி அமைக்கும் எனக் கணித்துள்ளன.

    இரு கருத்துக்கணிப்புகளும், பாஜக அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் அதிகபட்சமாக 10 தொகுதிகளை கைப்பற்றும் என, இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் கணித்துள்ளது.

    5th card

    தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸ்

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில், பெரும்பான்மைக்கு 60 தொகுதிகள் தேவை.

    ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது.

    இந்நிலையில், ஜன் கி பாத், இந்தியா டிவி- சிஎன்எக்ஸ், டிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட் ஆகியவை, காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கணித்துள்ளனர்.

    இந்தியா டிவி- சிஎன்எக்ஸ், அதிகபட்சமாக காங்கிரஸ் 79 தொகுதிகளை கைப்பற்றும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    ராஜஸ்தான்
    மத்திய பிரதேசம்
    மிசோரம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து முதல் அமைச்சர்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது டெல்லி
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா

    ராஜஸ்தான்

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா
    ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ இந்தியா
    ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்'க்கு கொரோனா தொற்று உறுதி முதல் அமைச்சர்
    பலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு இந்தியா

    மத்திய பிரதேசம்

    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் மோடி
    நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு சென்னை
    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு தமிழ்நாடு
    ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி இந்தியா

    மிசோரம்

    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை காங்கிரஸ்
    தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025