NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருமணத்திற்கு ₹200 கோடி- அமலாக்கத்துறை வளையத்தில் மகாதேவ் செயலி சிக்கியதன் பின்னணி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருமணத்திற்கு ₹200 கோடி- அமலாக்கத்துறை வளையத்தில் மகாதேவ் செயலி சிக்கியதன் பின்னணி 
    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றதாக சொல்லப்படும் மகாதேவி செயலி உரிமையாளர் சௌரப் சந்திரகர் திருமணத்தின் காட்சி.

    திருமணத்திற்கு ₹200 கோடி- அமலாக்கத்துறை வளையத்தில் மகாதேவ் செயலி சிக்கியதன் பின்னணி 

    எழுதியவர் Srinath r
    Oct 05, 2023
    11:27 am

    செய்தி முன்னோட்டம்

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த திருமணத்திற்கு, ₹200 கோடி ரொக்கமாக செலவு செய்ததன் விளைவாக, தற்போது அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் மகாதேவ் செயலி உரிமையாளர் சௌரப் சந்திரகர்.

    மகாதேவ் சூதாட்ட செயலி, துபாயை தலைமை இடமாகக் கொண்டு, இந்தியாவில் இயங்குகிறது. இதன் உரிமையாளர்களாக சௌரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் இருந்து வருகின்றனர்.

    இந்த செயலியில் கோடிக்கணக்கில் பணம் முறைகேடு நடந்திருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்தது.

    இதனை அடுத்து, மகாதேவ் செயலி தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி ₹417 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது.

    மகாதேவ் செயலியை விளம்பரப்படுத்தியதற்காக நாளை(அக்டோபர் 6ம் தேதி) இந்தி நடிகர் ரன்பீர் கபூரை நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    கடந்த பிப்ரவரியில் நடந்த உரிமையாளர் திருமணம்

    ஐக்கிய அரபு அமீரகத்தின், ராஸ் அல் கைமா நகரில், கடந்த பிப்ரவரி மாதம் சௌரப் சந்திரகர் திருமணம் நடைபெற்றது.

    உறவினர்கள் அமீரகம் செல்ல விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமணத்தில் சில பாலிவுட் நடிகர்களின் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த திருமணத்திற்கு மொத்தம், ₹200 கோடி செலவானதாகவும், அது ரொக்க பணமாக செலுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

    இது அமலாக்கத்துறையை மகாதேவ் செயலி பக்கம் திருப்பியது.

    இதை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி, மகாதேவ் செயலி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    அதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ₹112 கோடி ஹவாலா பணமாகவும், ₹42 கோடி பணமாக செலுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை கண்டறிந்தது. இது குறித்து அமலாக்கத்துறை மேலும் விசாரித்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    சமீபத்திய

    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா? ஹாலிவுட்
    ரிசர்வ் வங்கியுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட UAE-யின் சென்ட்ரல் வங்கி ரிசர்வ் வங்கி
    அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா? துபாய்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மற்றும் UAE வணிகம்
    UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025