மிசோரம் மாநிலத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
செவ்வாயன்று பெய்த மழையில் மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் முழுவதும் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் குறிப்பாக 11 பேர் கல் குவாரி சரிவின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மிசோரம் மாநிலமும் ரெமல் சூறாவளியால் தூண்டப்பட்ட புயல் மழையினை எதிர்கொண்டது.
இந்த புயல் மழை காரணமாக மெல்தம் மற்றும் ஹ்லிமென் மாவட்டங்களுக்கு இடையே கல் குவாரி இடிந்து விழுந்ததில், "இடிபாடுகளில் மேலும் பல உடல்கள் தொடர்ந்து சிக்கியுள்ளதாக" மிசோரம் முதல்வர் லால்துஹோமா உறுதிப்படுத்தினார்.
மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது இடத்தில் இருந்து மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதவி
நிவாரண நிதி அறிவிப்பு
நிலச்சரிவுக்குப் பிறகு, நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசு ₹15 கோடியை ஒதுக்கியுள்ளதாக லால்துஹோமா அறிவித்தார்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ₹4 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோசமான வானிலை காரணமாக அனைத்து பள்ளிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ முதல் 35-45 கிமீ வரை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், புயல் சேதம் காரணமாக அசாமின் ஹஃப்லாங் மற்றும் சில்சார் இடையேயான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.