NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மிசோரம் மாநிலத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிசோரம் மாநிலத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி
    11 பேர் கல் குவாரி சரிவின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்

    மிசோரம் மாநிலத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

    எழுதியவர் Venkatalakshmi V
    May 28, 2024
    02:02 pm

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாயன்று பெய்த மழையில் மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் முழுவதும் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

    இதில் குறிப்பாக 11 பேர் கல் குவாரி சரிவின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    மிசோரம் மாநிலமும் ரெமல் சூறாவளியால் தூண்டப்பட்ட புயல் மழையினை எதிர்கொண்டது.

    இந்த புயல் மழை காரணமாக மெல்தம் மற்றும் ஹ்லிமென் மாவட்டங்களுக்கு இடையே கல் குவாரி இடிந்து விழுந்ததில், "இடிபாடுகளில் மேலும் பல உடல்கள் தொடர்ந்து சிக்கியுள்ளதாக" மிசோரம் முதல்வர் லால்துஹோமா உறுதிப்படுத்தினார்.

    மற்றுமொரு மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது இடத்தில் இருந்து மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உதவி 

    நிவாரண நிதி அறிவிப்பு

    நிலச்சரிவுக்குப் பிறகு, நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசு ₹15 கோடியை ஒதுக்கியுள்ளதாக லால்துஹோமா அறிவித்தார்.

    உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ₹4 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மோசமான வானிலை காரணமாக அனைத்து பள்ளிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ முதல் 35-45 கிமீ வரை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையில், புயல் சேதம் காரணமாக அசாமின் ஹஃப்லாங் மற்றும் சில்சார் இடையேயான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மிசோரம்
    நிலச்சரிவு
    சூறாவளி
    புயல் எச்சரிக்கை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    மிசோரம்

    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை காங்கிரஸ்
    தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை வானிலை எச்சரிக்கை

    நிலச்சரிவு

    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  மகாராஷ்டிரா
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம் மகாராஷ்டிரா

    சூறாவளி

    அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் பெண் பெயர் கொண்ட சூறாவளிகள், புதிய ஆய்வு முடிவுகள் உலகம்
    தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு கனமழை
    தமிழக துறைமுகங்களில் 1ம்.,எண் புயல் எச்சரிக்கை கூண்டு-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மழை
    வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக வலுப்பெற வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்

    புயல் எச்சரிக்கை

    புயல் எச்சரிக்கை - டிசம்பர் 4ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை புதுச்சேரி
    தீவிரமடைந்தது 'மிக்ஜம்' புயல்: 12 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு  புதுச்சேரி
    திருவள்ளூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025