Page Loader
ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை 
ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை 

எழுதியவர் Nivetha P
Jul 09, 2023
11:17 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநில ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே அவர்கள் முகாமிட்டு தங்கி மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்று(ஜூலை.,8) 13 மீனவர்களையும் 2 படகுகளையும் கைது செய்த இலங்கை கடற்படை அவர்களை காங்கேசந்துறை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர் என்று தெரிகிறது. விரைவில் அவர்கள் காங்கேசந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைது 

கொந்தளிப்பில் ராமேஸ்வரம் மீனவர்கள் 

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதி மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வதோடு, அவர்களின் படகுகள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு ஓர் முடிவினைக்கட்ட மீனவர்களும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசு தரப்பிலும் இதுகுறித்து பல முறை இலங்கை அரசிடம் எடுத்துரைத்த பொழுதும், இலங்கை அரசு இது குறித்து எவ்வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.