Page Loader
இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 இந்திய மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை

இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 27, 2024
09:46 am

செய்தி முன்னோட்டம்

இந்திய மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர். அவர்கள் பல படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த இலங்கை கடற்படை, ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட மீனவர்கள் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்படையிலனர் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது. இச்சம்பவம் மீனவர்களின் குடும்பத்தினரை வெகுவாக பாதித்துள்ளது. அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர் கைது

மீனவர்களை தொடர்ந்து கைது செய்யும் இலங்கை கடற்படை 

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போக்கு, கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி மீனவர்கள் நாடு திரும்புவதற்கு உடனடி தூதரக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தார். அதில், இலங்கை கைது செய்து வைத்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடி படகுகளையும் விரைந்து மீட்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் வலியுறுத்தி இருந்தார். நீடித்த தீர்வுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் தெளிவான கடல் எல்லைகளை ஏற்படுத்துவது குறித்து தூதரகப் பேச்சுவார்த்தைகள் தேவை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

இலங்கை கடற்படை அராஜகம்