NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / திரிஷாவுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கு: நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு அபராதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திரிஷாவுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கு: நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு அபராதம்

    திரிஷாவுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கு: நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு அபராதம்

    எழுதியவர் Srinath r
    Dec 22, 2023
    05:06 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகை திரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மானநஷ்ட வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்து, வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அக்டோபர் மாதம் வெளியான லியோ திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் திரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். அப்படத்தில், திரிஷாவுடன் நடித்தது குறித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை மன்சூர் பதிவு செய்திருந்தார்.

    இதற்கு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், முதலில் மன்னிப்பு கேட்க மறுத்த மன்சூர், பின்னர் மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி, திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து, மன்சூர் அலிகானுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.

    2nd card

    விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

    அவர்கள் மூவரும் தெரிவித்த கருத்தால் தன் நட்பெயருக்கு களங்கம் நேர்ந்ததாக கூறி, அவர்களிடம் நஷ்டஈடு கேட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மன்சூர் மீது சில காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

    அதன்படி மன்சூர் அலிகானுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தும், அதை இரண்டு வாரங்களுக்குள் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போது அதை எதிர்ப்பது மனித இயல்பு என தெரிவித்த நீதிமன்றம், இந்த வழக்கு விளம்பர நோக்கத்திற்காகவும், நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்காகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மன்சூர் அலிகான்
    த்ரிஷா
    த்ரிஷா
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    மன்சூர் அலிகான்

    நடிகர் சங்க அறிக்கை குறித்து, நாசரிடம் தொலைபேசியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம் வைரல் செய்தி
    மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் நடிகர் சங்கம்
    சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு! சென்னை
    'மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை' - ஆதரவு தெரிவிக்கும் சீமான்  சீமான்

    த்ரிஷா

    கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா?- லோகேஷ் கனகராஜிடம் கேட்ட விஜய் லியோ
    எதிர்ப்புக்கு பணிந்தது லியோ படக்குழு- ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த ஆபாச வார்த்தையை மியூட் செய்தது லியோ
    லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி லியோ
    லியோ திரைப்படம் வெற்றி பெற  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சுவாமி தரிசனம் லியோ

    த்ரிஷா

    சென்னையில் லியோ திரைப்பட டிக்கெட் முன்பதிவில் தாமதம்  திரையரங்குகள்
    லியோ ஃபீவர்- 'லியோ' திரைப்படம் குறித்து ட்வீட் செய்த அனிருத்  லியோ
    தலைப்புக்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்- லியோ வெளியாவதில் தாமதம்? லியோ
    லியோ திரைப்படம் திரையிடப்பட மாட்டாது- ரோகிணி திரையரங்கு அறிவிப்பு லியோ

    சென்னை உயர் நீதிமன்றம்

    செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம் தமிழக அரசு
    'எந்தவொரு ஊதியமும் தேவையில்லை' - நிபந்தனையிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு  தமிழ்நாடு
    அமைச்சர் பொன்முடி வழக்கு - செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி விழுப்புரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025