NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கில் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கில் கைது
    ரேணுகா ஸ்வாமி என்ற நபரின் கொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கில் கைது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 11, 2024
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, கொலை வழக்கில் பெங்களூரு போலீசாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

    இப்போது, ​​அவரது தோழியும், சக நடிகையுமான பவித்ரா கவுடாவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

    'இவர்கள் இருவரும், மேலும் 10 பேருடன், ரேணுகா ஸ்வாமி என்ற நபரின் கொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

    ரேணுகா ஸ்வாமியின் கொலையை மூன்று பேர் ஒப்புக்கொண்டதாகவும், தர்ஷனின் அறிவுறுத்தலின் பேரில் தாங்கள் இந்தக் குற்றத்தைச் செய்ததாகவும் கூறியதை அடுத்து இந்தச் செய்தி வந்துள்ளது.

    கடந்த சனிக்கிழமை (ஜூன் 9) காமக்ஷிபாளையாவில் உள்ள வாய்க்காலில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது தான் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    கொலை 

    கொலை செய்யப்பட்டவர் தர்ஷனின் ரசிகர் 

    கொலையானவர், தர்ஷனின் ரசிகர் என்று கூறப்படுகிறது. பின்னர், அவர் அப்பல்லோ பார்மசி கிளையில் பணிபுரிந்த சித்ரதுர்காவைச் சேர்ந்த 33 வயதான ரேணுகா சுவாமி என்பது அடையாளம் காணப்பட்டது.

    விசாரணையில், ரேணுகா சுவாமி, பவித்ரா கவுடாவுக்கு, அவதூறான மற்றும் ஆபாசமான செய்திகளை அனுப்பியுள்ளார். அதுவே அவரது கொலைக்கு வழிவகுத்திருக்கலாம்.

    தர்ஷன், மைசூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டார்.

    இதற்கிடையில், அன்னபூர்ணேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் பவித்ராவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சில ஊடகங்கள் அவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

    கொலை விவரங்கள்

    கொலை மற்றும் விசாரணை விவரங்கள்

    மைசூருவில் உள்ள தர்ஷனின் பண்ணை வீட்டில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

    அங்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரேணுகா சுவாமியை சித்திரவதை செய்து கொன்றதாகக் கூறப்படுகிறது.

    வாய்க்காலில் பிணமாக கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கையில் ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டது உறுதியானது.

    இதற்கிடையில், தர்ஷன் முன்னிலையில் அவர் கொல்லப்பட்டதாக பல ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

    சர்ச்சைகள்

    தர்ஷன் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல

    தர்ஷன் தூகுதீபா பல ஆண்டுகளாக பல்வேறு சட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

    க்ளூட் செய்தியின்படி, 2011 இல், அவர் தனது மனைவியிடமிருந்து குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இதன் விளைவாக அவர் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் இருந்தார்.

    அடுத்தடுத்த ஆண்டுகளில், 2016இல் ஆட்சேபனைக்குரிய நடத்தை பற்றிய புகார்கள் மற்றும் 2021 இல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் உட்பட மேலும் சட்ட சிக்கல்களை அவர் எதிர்கொண்டார். 2022 ஆம் ஆண்டில், தயாரிப்பாளர் பரத், தர்ஷன் தனக்கு மிரட்டல் விடுத்ததாக காவல்துறையில் புகார் அளித்தார்.

    அடுத்த ஆண்டு, அதிகாரிகள் தர்ஷனின் பண்ணை வீட்டில் சோதனை நடத்தி, சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறி, பட்டை-தலை வாத்துக்களைக் கைப்பற்றினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர்
    கன்னட படங்கள்
    கைது
    கொலை

    சமீபத்திய

    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்
    இந்திய அரசாங்கம் துருக்கிய செய்தி தளமான TRT World ஐ X இல் முடக்கியது; ஏன்? மத்திய அரசு
    அமெரிக்கா ஜனாதிபதிக்கு இணையாக சம்பளம் பெறும் போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? போப் லியோ XIV

    நடிகர்

    மீண்டும் இணையும் மங்காத்தா ட்ரையோ?- விடாமுயற்சி திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பதாக தகவல் துணிவு
    புரூக்ளின் நைன்-நைன், ஹோமிசைட் சீரிஸ்களில் நடித்த ஆண்ட்ரே ப்ராகர் 61 வயதில் மரணம் ஹாலிவுட்
    நடிகர் ஆதி நடித்துள்ள 'சப்தம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்படம்
    2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை திரைப்பட விருது

    கன்னட படங்கள்

    படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு தமிழ் திரைப்படம்
    கார் மோதியதால் மனைவி பலி, கணவன் படுகாயம்- பிரபல நடிகர் கைது பெங்களூர்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்
    கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனுஷ்

    கைது

    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை
    பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம் பீகார்
    நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு காரணமாக தொடரும் அமளி - 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  நாடாளுமன்றம்
    போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது சிறை

    கொலை

    காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    காதலியை கொன்று, அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த நபரால் சென்னையில் பரபரப்பு  சென்னை
    பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்  பிரான்ஸ்
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை வழக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025