NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு: தக் லைஃப் காட்டிய கமல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு: தக் லைஃப் காட்டிய கமல்
    மன்னிப்பு கேட்க முடியாது என தக் லைஃப் காட்டிய கமல்

    தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு: தக் லைஃப் காட்டிய கமல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2025
    03:45 pm

    செய்தி முன்னோட்டம்

    மன்னிப்பு கேட்பதற்கு கெடு விதித்த கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு, கமல் தனது பாணியில் பதிலளித்து உள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

    அதன்படி, "தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு. நாங்கள் பட வெளியீட்டை கர்நாடகாவில் ஒத்தி வைக்கிறோம்" என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    'தக் லைஃப்' பட ப்ரோமோஷனின் போது பேசிய சர்ச்சைக்கு தக் லைஃபாக பதில் தெரிவித்துள்ளார் கமல்.

    "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெருஞ்சர்ச்சையை தூண்டியது.

    இதனைத்தொடர்ந்து தனது படத்தின் வெளியீட்டிற்கு பாதுகாப்பு கோரி கமல், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

    இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த பெஞ்ச், கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #BREAKING | கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் தரப்பு வாதம்!#SunNews | #ThugLife | @ikamalhaasan pic.twitter.com/IPNXtdoy50

    — Sun News (@sunnewstamil) June 3, 2025

    ஒத்தி வைப்பு

    நீங்க என்னடா தடை போடுறது, நானே ஒத்திவைக்கிறேன் என முடிவெடுத்த கமல்

    முன்னதாக கர்நாடக உயர்நீதிமன்றம், மன்னிப்பு கேட்டால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதிக்க முடியுமென தெரிவித்து இன்று 2 மணிக்குள் பதில் கூறுமாறு தெரிவித்திருந்தது.

    2 மணிக்கு, கமல் தரப்பு படத்தின் வெளியீட்டையே ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது.

    இதனிடையே "கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எந்த வகையிலும் கன்னட மொழியை தாழ்த்திப்பேசவில்லை'' என KFCC தலைவருக்கு இன்று கமல் கடிதம் எழுதியுள்ளார்.

    "என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தம் அளிக்கிறது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதையை கொண்டுள்ளேன். நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பம் என்பதை தான் என் கருத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேன்"எனக்கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கமல்ஹாசன்
    கமலஹாசன்
    கர்நாடகா
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு: தக் லைஃப் காட்டிய கமல் கமல்ஹாசன்
    ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி நபர், உயிருக்கு போராடி வருகிறார் ஆஸ்திரேலியா
    'சீனா பிரம்மபுத்திரா நீரை நிறுத்தினால் என்ன செய்வீர்கள்?' இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்  சீனா
    கமல்ஹாசன் Vs கர்நாடக உயர் நீதிமன்றம்: இன்றுக்குள் மன்னிப்பு கேட்க கெடு- கேட்பாரா? கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    சிம்பு இல்லை, ரம்யா கிருஷ்ணன் இல்லை; பிக் பாஸ் தமிழ்-ஐ ஹோஸ்ட் செய்யப்போவது இவர் தான் பிக் பாஸ் தமிழ்
    கொட்டுக்காளி படத்தின் முதல் விமர்சனத்தை தந்த உலகநாயகன்: பெருமிதத்துடன் பகிர்ந்த சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன்
    கொட்டுக்காளி படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்களின் முதல் விமர்சனம் திரைப்படம்
    நடிகர் கமல்ஹாசனுக்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி

    கமலஹாசன்

    நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை, நடிகர் கிருஷ்ணா சிலையை திறந்து வைத்தார் கமல்ஹாசன் ஆந்திரா
    தலைவர்171 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய் சேதுபதி? ரஜினிகாந்த்
    அதிக சம்பளம் கேட்டதால் பிரதீப் ரங்கநாதனை கைவிட்ட கமல்? விக்னேஷ் சிவன்
    விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் கமலின் ஆளவந்தான் திரைப்படம் கமல்ஹாசன்

    கர்நாடகா

    கர்நாடக அரசு ஏன் SBI, PNB உடனான பரிவர்த்தனைகளை நிறுத்தி வைத்துள்ளது எஸ்பிஐ
    நிலமோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி இந்தியா
    ஊழல் வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க கூடாது: கர்நாடக உயர் நீதிமன்றம்  உயர்நீதிமன்றம்
    கர்நாடக சிறையில் நடிகருக்கு விஐபி அந்தஸ்து; 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் பெங்களூர்

    உயர்நீதிமன்றம்

    கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்றம்
    தேர்தல் பத்திர வழக்கில் நிர்மலா சீதாராமன் மீதான விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை நிர்மலா சீதாராமன்
    ஈஷா அறக்கட்டளை மீதான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை; காவல்துறைக்கு அதிரடி உத்தரவு ஈஷா யோகா
    ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை என்ன? ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025