இயக்குனர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை; இதுதான் காரணம்
செய்தி முன்னோட்டம்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் தொடங்கப்பட்ட விசாரணையில், திரைப்பட இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது அமலாக்க இயக்குநரகம்.
இதன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்தின் கதையை ஆரூர் தமிழ்நாடன் எழுதிய 'ஜிகுபா'விலிருந்து ஷங்கர் நகலெடுத்ததாகக் கூறி, பதிப்புரிமைச் சட்டம், 1957 இன் கீழ் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த PMLA விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையிலே ஷங்கரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
𝗘𝗗 𝗮𝘁𝘁𝗮𝗰𝗵𝗲𝘀 𝗱𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿 𝗦𝗵𝗮𝗻𝗸𝗮𝗿’𝘀 𝗽𝗿𝗼𝗽𝗲𝗿𝘁𝗶𝗲𝘀 𝘄𝗼𝗿𝘁𝗵 𝗥𝘀 𝟭𝟬.𝟭𝟭𝗰𝗿 𝘂𝗻𝗱𝗲𝗿 𝗣𝗠𝗟𝗔.
— 𝗙𝗶𝗹𝗺𝘆 𝗩𝗶𝗲𝘄 (@filmy_view) February 21, 2025
Tamilnadan alleged that the storyline of #Enthiran (#Robot), a blockbuster film directed by #Shankar, was plagiarised from his short story #Jiguba.… pic.twitter.com/0MsmNtILuS
வழக்கு
எந்திரன் படத்தின் பதிப்புரிமை வழக்கின் விவரங்கள்
மே 19, 2011 அன்று இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டதாக ED தெரிவித்துள்ளது.
கதை உருவாக்கம், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் உட்பட எந்திரனுக்கு வழங்கிய பங்களிப்புகளுக்காக ஷங்கர் ரூ.11.5 கோடி பெற்றுள்ளதாக ED விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூடுதலாக, இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒரு சுயாதீன அறிக்கை, ஜிகுபா கதைக்கும், திரைப்படத்திற்கும் இடையிலான குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளை அடையாளம் கண்டுள்ளது.
கதை அமைப்பு, கதாபாத்திர வளர்ச்சி மற்றும் கருப்பொருள் கூறுகளை ஆய்வு செய்த இந்த அறிக்கை, ஷங்கருக்கு எதிரான கருத்துத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது என்று ED தெரிவித்துள்ளது.