NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் தலைவர் விஜய் சேகர் சர்மா ராஜினாமா; வெளியான காரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் தலைவர் விஜய் சேகர் சர்மா ராஜினாமா; வெளியான காரணம்
    விஜய் சேகர் ஷர்மா, நேற்று மாலை, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

    பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் தலைவர் விஜய் சேகர் சர்மா ராஜினாமா; வெளியான காரணம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 27, 2024
    10:44 am

    செய்தி முன்னோட்டம்

    பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நிறுவன தலைவர் விஜய் சேகர் ஷர்மா, நேற்று (பிப்., 26) மாலை, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து, பேடிஎம்-இன் தாய் நிறுவனமான One 97 Communications Ltd (OCL), Paytm Payments Bank Limited(PPBL) அதன் குழுவை மறுசீரமைத்துள்ளதாகவும் அறிவித்தது.

    முன்னதாக, மார்ச் 15க்குப் பிறகு வாடிக்கையாளர்களிடமிருந்து டெபாசிட்கள் மற்றும் கிரெடிட்களைப் பெறுவதற்கு PPBLயை ஆர்பிஐ தடை செய்த பிறகு, வங்கியில் தொடர்ந்து பொருள் மேற்பார்வைக் கவலைகள் காரணமாக இந்த நடவடிக்கை வெளியாகியுள்ளது.

    "விஜய் சேகர், வாரியத்தில் இந்த மாற்றத்தை செயல்படுத்துவதற்காக ராஜினாமா செய்துள்ளார். PPBL புதிய தலைவரை நியமிக்கும் செயல்முறையைத் தொடங்குவதாக எங்களுக்குத் தெரிவித்துள்ளது" என்று OCL ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    PPBL

    புதிய இயக்குனர்கள் நியமனம்

    இதற்கிடையில், இந்திய மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் சீனிவாசன் ஸ்ரீதர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேபேந்திரநாத் சாரங்கி, பரோடா வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் அசோக் குமார் கார்க், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் ரஜினி செக்ரி சிபல் ஆகியோர் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக் குழுவில் சுதந்திர இயக்குநர்களாக இணைந்துள்ளனர்.

    இந்த மாத தொடக்கத்தில், Paytm Payments வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் கணக்குகளை மார்ச் 15ஆம் தேதிக்குள் மற்ற வங்கிகளுக்கு மாற்றுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.

    மார்ச் 15க்குப் பிறகு சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களும், PPBL கணக்குகளில் வரவு வைக்கப்படாது.

    PPBL மூலம் EMI அல்லது OTT சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்களும் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்பிஐ
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஆர்பிஐ

    50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு வீழ்ச்சி: ஆர்பிஐ  வணிகம்
    12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல் இந்தியா
    கடைசி தேதிக்கு பிறகும் ₹2,000 நோட்டுகள் கைவசம் இருக்கிறதா? வங்கியிலிருந்து பணம் பெற 2 வழிகள் ரிசர்வ் வங்கி
    பிப்., 29க்கு பிறகு Paytm Payments Bank பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என அறிவிப்பு ரிசர்வ் வங்கி

    ரிசர்வ் வங்கி

    "மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர் இந்தியா
    முதன்முறையாக ரூ.2 லட்சம் கோடியை எட்டிய கிரெடிட் கார்டு கடன் நிலுவைத் தொகை கடன்
    கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி இந்தியா
    ரிசர்வ் வங்கியுடன் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட UAE-யின் சென்ட்ரல் வங்கி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025