NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பில் விவசாய வளர்ச்சிக்கு இரண்டு புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பில் விவசாய வளர்ச்சிக்கு இரண்டு புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பிலான விவசாய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

    ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பில் விவசாய வளர்ச்சிக்கு இரண்டு புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 04, 2024
    10:37 am

    செய்தி முன்னோட்டம்

    விவசாயத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரி ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (PM-RKVY) மற்றும் தன்னிறைவுக்கான உணவுப் பாதுகாப்பை அடைவதற்கான கிருஷோன்னதி யோஜனா (KY) ஆகிய திட்டங்களுக்கு வியாழனன்று (அக்டோபர் 3) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இரண்டு திட்டங்களும் பயிர் மேலாண்மை மற்றும் வேளாண்துறை சார்ந்த ஸ்டார்ட்அப்களுக்கான நிதி உள்ளிட்ட விவசாய இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் என்றார்.

    இந்த வேளாண்மைத் திட்டங்கள் பருவநிலையை எதிர்க்கும் தன்மை, மதிப்புச் சங்கிலி மேம்பாடு மற்றும் ஸ்டார்ட்அப்கள் உள்ளிட்ட விவசாயத்துறையில் எழும் சவால்களில் கவனம் செலுத்தும் என்றார்.

    இந்த இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.1.01 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    முன்னுரிமை

    விவசாயத்திற்கு முன்னுரிமை

    முன்னதாக, 2024-25 பட்ஜெட்டில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தார்.

    இது முந்தைய நிதியாண்டில் ரூ.1.40 லட்சம் கோடியாக இருந்தது. 2024-25 மத்திய பட்ஜெட் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 7,550 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    இது 2007இல் தொடங்கப்பட்டது. இது அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளை மேம்படுத்துகிறது.

    வரவிருக்கும் கூட்டத்தில் இத்திட்டம் பிரதம மந்திரி கிரிஷி விகாஸ் யோஜனா என மறுபெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கிருஷோன்னதி யோஜனா

    தேசிய உணவு பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் கிருஷோன்னதி யோஜனா

    கிருஷோன்னதி யோஜனா திட்டமானது, தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம், தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டம் மற்றும் வேளாண்மை விரிவாக்கத்திற்கான துணைத் திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் ஒட்டுமொத்த விவசாய மேம்பாட்டை ஆதரிக்கிறது.

    இத்திட்டம், சமையல் எண்ணெய்க்கான தேசிய மிஷன் மூலம் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் டிஜிட்டல் வேளாண்மை மிஷன் மூலம் நவீன விவசாய நுட்பங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு அடைய, ஏழு வருடங்கள் நீடிக்கும் சமையல் எண்ணெய்கள் - எண்ணெய் வித்துக்கள் (NMEO-எண்ணெய் வித்துக்கள்) மீதான தேசிய செயல் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த முயற்சிக்காக அரசு ரூ.10,103 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா
    விவசாயிகள்
    வர்த்தகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மத்திய அரசு

    விவசாயத்துறையில் 7 புதிய திட்டங்கள்; ₹14,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் விவசாயிகள்
    மொபைல் போன்களுக்கு வருகிறது 'ரிப்பேரபிலிட்டி இன்டெக்ஸ்'; மத்திய அரசு அறிவிப்பு மொபைல்
    எரிபொருள் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது வணிகம்
    ஆந்திரா, தெலுங்கானா வெள்ள பாதிப்பு; உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு ஆந்திரா

    இந்தியா

    இந்தியாவில் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்தது ரோல்ஸ் ராய்ஸ்; விலை எவ்ளோ தெரியுமா? ரோல்ஸ் ராய்ஸ்
    Mpox கிளேட் 1 பி வழக்கு: மத்திய அரசு வெளியிட்ட நடைமுறைகள் குரங்கம்மை
    அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பிரம்மோஸ் நிறுவனம் அறிவிப்பு தொழில்நுட்பம்
    போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்துள்ளீர்களா? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் நிதித்துறை

    விவசாயிகள்

    என்.எல்.சி. சேதப்படுத்திய நெற்பயிர்கள் - ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க உத்தரவு நெய்வேலி
    என்.எல்.சி. நிர்வாகத்திடம் அறுவடை முடிந்தவுடன் நிலங்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு  நெய்வேலி
    77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பசுமைப் புரட்சி இந்தியா
    தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம் கர்நாடகா

    வர்த்தகம்

    இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு இந்தியா
    ரூ.400 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தங்களது சேவையை விரிவுபடுத்துகிறது மேக்சிவிஷன் தமிழ்நாடு
    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? கனடா
    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025